டெல்லியில் எரிக்கப்பட்ட பாதுகாப்பு படை வீரர் முகமது அனீஸ் வீடு.. பிஎஸ்எப் தரப்போகிறது கல்யாண பரிசு
டெல்லி: வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தில் எரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வீடுகளில் எல்லை பாதுகாப்பு படை வீரர், முகமது அனீஸின் (29) வீடும் ஒன்று.
பாகிஸ்தானுக்கே ஓடிப்போய்விடு என்ற கோஷத்தோடு, அவரது வீடும் இடிக்கப்படும் என்று, யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அப்படித்தான் சொல்லி இடித்து தள்ளப்பட்டது அவர் வீடு.

எல்லை பாதுகாப்பு படை வீரராக இருந்தாலும் முஸ்லீம் என்பதால், இப்படி ஒரு இழப்பையும், தாக்குதலையும் சந்தித்தது முகமது அனீஸ் குடும்பம் என்று கூறப்படுகிறது. நாடு முழுக்க இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முகமது அனீசின் பெற்றோர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை இன்று சந்தித்தார், பி.எஸ்.எஃப் டி.ஐ.ஜி புஷ்பேந்திர ரத்தோர்.
இடிக்கப்பட்ட வீட்டை புனரமைத்து 'திருமண பரிசாக' அனீஸிடம் ஒப்படைப்போம் என்று அவர் உறுதியளித்தார். பிப்ரவரி 25ம் தேதிதான், யாரும் எதிர்பார்க்காத அந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது.
"இதர் ஆ பாகிஸ்தான், துஜே நாகரிக்தா டிடே ஹை (இங்கு வாருங்கள் பாகிஸ்தானி, நாங்கள் உங்களுக்கு குடியுரிமை தருவோம்)" என்று வன்முறை குண்டர்கள் அனீஸின் வீட்டிற்கு வெளியே நின்றிருந்த கார்களை தீ வைத்துக் கொண்டே கூச்சலிட்டதை இன்னும் மறக்க முடியவில்லை என்கிறார்கள் அவரது குடும்பத்தார்.
இதன்பிறகு அந்த கும்பல் காஸ் சிலிண்டரை எறிந்து வீட்டிற்கு தீ வைத்துள்ளது. அனீஸைத் தவிர, அவரது தந்தை முகமது முனிஸ், உறவுக்காரர் முகமது அகமது, மற்றும் கசின் சிஸ்டரான நேஹா பர்வீன் (18), ஆகியோர், தாக்குதல் நடந்தபோது, அந்தக் வீட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர்கள் அனைவரும் துணை ராணுவ வீரர்கள் உதவியுடன் காயமின்றி தப்பித்தனர்.
இதில் நேகா பர்வீனுக்கு ஏப்ரலிலும், முகமது அனீஸுக்கு அதற்கு அடுத்த மாதமும் திருமணமாக உள்ளது. திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
புஷ்பேந்திர ரத்தோர் மேலும் கூறுகையில், "எங்களுக்கான, நல நிதியில் இருந்து ரூ .10 லட்சம் உதவித் தொகையை வழங்க முடிவு செய்துள்ளோம். மேலும், பிஎஸ்எப் பொறியியல் பிரிவு பதினைந்து நாட்களுக்குள் வீட்டை மீண்டும் கட்டிக் கொடுக்கும். இது அவருக்கு திருமண பரிசாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications