அதிகம் சம்பாதித்தால் அதிகம் வரி.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் விதித்த புதிய வரிகள்
Recommended Video
டெல்லி: கூடுதலாக வருவாய் ஈட்டினால் கூடுதலாக வரி செலுத்தும் வகையில், வரிகளை மாற்றியுள்ளார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இன்றைய பட்ஜெட் உரையில், பணக்காரர்களை குறி வைத்து அவர் வரி வலையை வீசினார் என்றே சொல்ல முடியும்.

ரூ .2 கோடி முதல் ரூ .5 கோடி வரை வருமானம் கொண்ட தனிநபருக்கு 3 சதவீத கூடுதல் வரியை நிர்மலா சீதாராமன் விதித்தார். ஆண்டுக்கு ரூ .5 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் நபர்களுக்கு, கூடுதல் வரியாக 7 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வருமான வரி செலுத்துபவர்களின் பிற பிரிவினருக்கு, வரி விகிதங்கள் மற்றும் வரி அடுக்குகள் மாறாமல் இருக்கும். வருமான வரி வருமானத்தை தாக்கல் செய்வதற்கு ஆதார் மட்டும் போதும், பான் தேவையில்லை என்று சீதாராமன் அறிவித்தார்.
பிப்ரவரியில், நரேந்திர மோடி அரசு, வருமான வரி செலுத்துவோருக்கு வரி தள்ளுபடி மற்றும் நிலையான விலக்கு அதிகரிப்புடன் சில சலுகைகளை தனது இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தது.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 87 ஏ இன் கீழ் ரூ .12,500 வரை வருமான வரிச்சலுகையை அரசு அறிவித்தது. ஆண்டுக்கு ரூ .5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வருமான வரி கிடையாது என அப்போது அறிவிக்கப்பட்டது. அதுவே தொடரும் என நிர்மலா சீதாராமன் இப்போது கூறியுள்ளார்.
ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வங்கிக் கணக்கில் பணம் எடுத்தால் 2 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும், நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இதுவும் பணக்காரர்கள் மீதான சுமையாக மாறக்கூடும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications