டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி விமானம், ரயில் மூலம் பார்சல்.. விவசாயிகளுக்காக கிசான் ரயில் அறிமுகம்.. நிர்மலா கலக்கல்!

இந்தியா முழுக்க காய்கறிகளை எடுத்துச் செல்ல 'கிசான் ரயில்' அறிமுகம் செய்யப்படும், என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புவெளியிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது - நிர்மலா சீதாராமன்

    டெல்லி: இந்தியா முழுக்க காய்கறிகளை எடுத்துச் செல்ல 'கிசான் ரயில்' அறிமுகம் செய்யப்படும், பால், பழங்கள், காய்கறிகளைக் கொண்டு செல்ல தனி ரயில்கள் இயக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புவெளியிட்டுள்ளார்.

    நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகளை தற்போது நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

    Budget 2020: Kisan Train will be introduced for Parcel service says Finance Minister Nirmala

    இந்த அறிவிப்பில் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. விவசாயம் தொடர்பான அறிவிப்புகள் அதிகமாக வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விவசாயிகளுக்காக முதல்முறையாக கிசான் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பால், பழங்கள், காய்கறிகளைக் கொண்டு செல்ல தனி ரயில்கள் இயக்கப்படும். இதில் குளிர்சாதன வசதிகள் இருக்கும்.

    அதேபோல் விமானத்தில் காய்கறிகளை கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விரைவில் அளிக்கக்கூடிய காய்கறி பழங்கள் நுகர்வோரை விரைவில் சென்றடைய கிருஷி உடான் என்ற புதிய திட்டத்தின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து மூலம் விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல வசதி ஏற்படுத்தப்படும்.

    அதேபோல் இந்தியாவில் உள்ள காய்கறிகளுக்கு நபார்ட் மூலம் அடையாளம் காணப்பட்டு, புவி சார் குறியீடு வழங்கப்படும். கிராமங்களில் காய்கறி , பழங்களை பதப்படுத்தும், பாதுகாக்கும் முறைகள் கொண்டு வரப்படும். இதற்கான செலவு குறையும்.

    சென்னையிலிருந்து பெங்களூருக்கு சர்ர்ர்ன்னு பறக்கலாம்.. வருகிறது எக்ஸ்பிரஸ் சாலை.. நிர்மலா அறிவிப்புசென்னையிலிருந்து பெங்களூருக்கு சர்ர்ர்ன்னு பறக்கலாம்.. வருகிறது எக்ஸ்பிரஸ் சாலை.. நிர்மலா அறிவிப்பு

    இதை பெண்கள் நாடு முழுக்க நிர்வகிக்கும் வகையில் செயல்படுத்தப்படும். பெண்கள் மீண்டும் நாட்டின் தனலட்சுமிகளாக மாறுவார்கள். ஒரு மாவட்டம், ஒரு பொருள் என்ற திட்டம் மூலம் நாடு முழுக்க ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒரு பொருள் அதிக கவனத்துடன் உருவாக்கப்படும்.மொத்தமாக விவசாய துறைக்கு 15 லட்சம் கோடி ரூபாய்க்கு செலவு செய்யப்படும், என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Budget 2020: Kisan Train will be introduced for Parcel service says Finance Minister Nirmala Sitharaman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X