பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட்.. இந்திய விமானப் படைக்கு அதிக நிதி ஒதுக்கீடு!
டெல்லி: பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டில் இந்திய விமானப் படைக்கு ரூ 5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். முப்படைகளில் இந்திய விமான படைக்குத்தான் அதிக நிதி.
2022-2023 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 4ஆவது முறையாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட், இரண்டாவது ஆண்டாக காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் உரையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், இந்திய கடற்படையை நவீனமயமாக்க 43 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விமான படைக்கு எவ்வளவு
அது போல் இந்திய விமான படைக்கு ரூ 56,851 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டை ஒப்பிடும் போது 4.5 சதவீதம் அதிகமாகும். ஆனால் இந்திய ராணுவத்திற்கு ரூ 32,102 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகும். கடந்த நிதியாண்டில் ரூ 36,481.90 கோடி ஒதுக்கப்பட்டது. இந்திய கடற்படைக்கு ரூ 47,590 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 43 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு ரூ 33,253 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

5.25 லட்சம் கோடி
ஒட்டுமொத்தமாக பாதுகாப்புத் துறைக்கென பட்ஜெட் நிதி ரூ 5.25 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ 4.78 லட்சம் கோடியாக இருந்த பட்ஜெட் நிதியை விட ரூ 46,970 கோடி அதிகமாகும். அதாவது 9.82 சதவீதம் அதிகம். இதில் ஆயுத படைகளுக்கான ஓய்வூதிய தொகை ரூ 1.19 லட்சம் கோடியும் அடங்கும். இந்த தொகை கடந்த ஆண்டை விட 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

12 சதவீதம் அதிகம்
இந்த ரூ 5.25 லட்சத்தில் புதிய ஆயுதங்கள், போர் விமானங்கள், போர் கப்பல்கள், இதர ராணுவ தளவாடங்கள் வாங்க 1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 12 சதவீதம் அதிகமாகும். கடந்த நிதியாண்டில் 1.35 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஊழியர்களின் ஊதியம், பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்காக 2.33 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத்துறைகளின் ஆராய்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ராணுவத்திற்கான பட்ஜெட் மதிப்பில் 25% நிதி பாதுகாப்புத் துறை ஆராய்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும்.
Recommended Video

மேம்பாட்டு பிரிவு
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 68% ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இறக்குமதிகள் குறைக்கப்படும் என்றார் நிர்மலா சீதாராமன்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications