Budget 2026: நாட்டின் பொருளாதர வளர்ச்சியை ஊக்குவிக்க 6 அம்ச திட்டங்கள்.. பட்ஜெட்டில் அறிவித்த நிர்மலா சீதாராமன்
டெல்லி: 2026-2027 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வரும் இந்த பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க 6 அம்ச திட்டங்களை முன்மொழிந்துள்ளார். இதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது பொருளாதர வளர்ச்சியை ஊக்குவிக்க 6 அம்ச திட்டங்களை நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார். அதன் விவரம் வருமாறு:-

* ஏழு முக்கிய மற்றும் முன்னோடி துறைகளில் உற்பத்தியை பெருமளவில் விரிவுபடுத்துதல்
* பாரம்பரிய தொழில்துறைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்படும்.
* முன்னணி MSME (சிறு, குறு, நடுத்தர) நிறுவனங்களை உருவாக்குதல்
* உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு வலுவான ஊக்கத்தை வழங்குதல்
* நீண்டகால பாதுகாப்பும் நிலைத்தன்மையும் உறுதி செய்தல்
* நகர மைய பொருளாதாரப் பகுதிகளை மேம்படுத்துதல்
ஆகிய 6 திட்டங்களை நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார்.
நிர்மலா சீதாரமன் தனது பட்ஜெட் உரையில் பேசியதாவது:- புதிய தொழில் நுட்பத்தால் உற்பத்தி துறையில் பெரும் வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இந்தியாவை உருவாக்கும் முயற்சிக்கு ஒத்துழைத்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏழை எளிய விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது அரசின் கொள்கையாகும். சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் நாட்டின் வளங்களை பெறுவது அரசின் லட்சியங்களில் ஒன்றாகும். புதிய தொழில் நுட்பத்தால் உற்பத்தி துறையில் பெருவளர்ச்சி உறுதி செய்ய்ப்பட்டுள்ளது.
உயிரி மருத்துவ திட்டத்தை ஊக்குவிக்க ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். எலக்ட்ரானிக்ஸ் துறையை ஊக்குவிக்க 40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்காக்கள் உருவாக்கப்படும். கடலோர போக்குவரத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications