5 மாநில சட்டசபை தேர்தல் மட்டுமல்ல.. 6 மாநில இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது தேர்தல் ஆணையம்
சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தலோடு மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் சட்டசபை தேர்தல் தேதி இன்று (மார்ச் 15) அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் இருகட்டங்களாக ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் மே மாதம் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்தநிலையில் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் நாள் இன்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவாவில் ஏப். ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும், மகாராஷ்டிரா, குஜராத்தில் ஏப். 23 ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவா - போன்டா
குஜராத் - அம்ரேத்
கர்நாடகா - பாகல்கோட், தாவநாகரி தெற்கு
மகாராஷ்டிரா - ராஹுரி, பாராமதி
நாகாலாந்து - கோரிடாங்க்
திரிபுராவில் - தர்மாநகர்
மே 4 ஆம் தேதி, 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையோடு, இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
-
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
கட்சிக்காரங்கள விட்ருங்க..கல்யாண வீட்டுக்காரங்கள புடிங்க! தேர்தல் சீசனில் முகூர்த்தம்! பாவம் மக்கள்! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்? -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
மதுக்கடைகளுக்கு தேர்தல் ஆணையம் போடும் கடிவாளம்.. ஓவர் டைம் என புலம்பும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும்












Click it and Unblock the Notifications