5 மாநில சட்டசபை தேர்தல் மட்டுமல்ல.. 6 மாநில இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது தேர்தல் ஆணையம்
சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தலோடு மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் சட்டசபை தேர்தல் தேதி இன்று (மார்ச் 15) அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் இருகட்டங்களாக ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் மே மாதம் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்தநிலையில் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் நாள் இன்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவாவில் ஏப். ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும், மகாராஷ்டிரா, குஜராத்தில் ஏப். 23 ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவா - போன்டா
குஜராத் - அம்ரேத்
கர்நாடகா - பாகல்கோட், தாவநாகரி தெற்கு
மகாராஷ்டிரா - ராஹுரி, பாராமதி
நாகாலாந்து - கோரிடாங்க்
திரிபுராவில் - தர்மாநகர்
மே 4 ஆம் தேதி, 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையோடு, இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
-
தமிழக தலைமை செயலாளர் மாற்றம்.. வெட்கக் கேடானது! தேர்தல் ஆணையம் மீது முதல்வர் ஸ்டாலின் காட்டம் -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
செந்தில் பாலாஜின்னா சும்மாவா.. கரூரில் 4.40-க்கு அண்ணன் - தம்பி காட்டிய அரசியல் வித்தை! மாஸ்டர் மூளை -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்!












Click it and Unblock the Notifications