டெல்லி ஜம்மா மசூதியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்- பீம் ஆர்மி சந்திரசேகர ஆசாத் கைது
Recommended Video
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லி ஜம்மா மசூதியில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்துக்கு தலைமை வகித்த பீம் ஆர்மி சந்திரசேகர ஆசாத்தை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி ஜம்மா மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்த தொழுகைக்கு பின்னர் அனைவரும் ஒன்று திரண்டு குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு உத்தரப்பிரதேசத்தின் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத்
Delhi: Protest continues at Jama Masjid against #CitizenshipAmendmentAct, Bhim Army Chief Chandrashekhar Azad also present. Delhi Police is using drones to monitor the situation. Azad had earlier been denied permission for a protest march from Jama Masjid to Jantar Mantar. pic.twitter.com/AVygYnkkic
— ANI (@ANI) December 20, 2019
முன்னதாக சந்திரசேகர ஆசாத், போராட்டத்துக்கு தலைமை வழங்க போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இதனையடுத்து போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய சந்திரசேகர ஆசாத் கைது செய்யப்பட்டார்.
ரொம்ப ஓவரா இருக்கு உங்க போராட்டம்.. நாங்க பொறுமை இழந்தா கோத்ராதான்.. பாஜக அமைச்சர் பகிரங்க வார்னிங்
ஹைதராபாத், மும்பை
Maharashtra: Protest outside Hari Masjid in Mumbai, against #CitizenshipAmendmentAct and National Register of Citizens (NRC). pic.twitter.com/n7pq3RmRFE
— ANI (@ANI) December 20, 2019
இதேபோல் ஹைதராபாத் சார்மினார், மும்பை ஹரி மஸ்ஜித் ஆகிய இடங்களிலும் குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி. ஆகியவற்றுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.