Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துருக்கி, அஜர்பைஜான் உடன் இனி வர்த்தக உறவுகள் கிடையாது! வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் மோதலில் பாகிஸ்தான் பக்கம் துருக்கியும், அஜர்பைஜானும் நின்றது. எனவே, இரு நாடுகளுடனான வர்த்த உறவுகளை துண்டித்துக் கொள்வதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Turkey Azerbaijan Pakistan

டெல்லியில் நேற்று தேசிய வர்த்தக மாநாடு நடைபெற்றது. இதில், 125 க்கும் மேற்பட்ட வர்த்தகத் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த மாநாட்டில்தான் வர்த்தக முறிவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தீர்மானத்தில், இந்திய வணிகர்கள் இனி இந்த நாடுகளுடன் வர்த்தகம் செய்ய மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம், இரு நாடுகளில் எந்த படத்தையும் தயாரிக்க வேண்டாம் என்று இந்திய திரைத்துறையினரை வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்படி மீறி திரைப்படம் உருவாக்கப்பட்டால் அப்படத்தை பொதுமக்களும், வணிகர்களும் புறக்கணிப்பார்கள் என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது திரைப்படங்களுக்கு மட்டுமல்ல, விளம்பரங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டில் 24 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிராக நிற்கும் எந்தவொரு சக்தியையும் நாங்கள் தனிமைப்படுத்துவோம் என்று கூறியுள்ள வணிகர்கள், இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் முழு ஆதரவளிப்போம் எனவும் கூறியுள்ளனர்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரவீன் கண்டேல்வால், "இந்தியாவின் ஆதரவால் பலனடைந்த துருக்கி மற்றும் அஜர்பைஜான், இப்போது பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் பக்கம் நிற்பது துர்திஷ்டவசமானது. இந்த இரண்டு நாடுகளின் நிலைப்பாடு இந்தியாவின் இறையாண்மை மற்றும் தேசிய நலன்களின் மீதான நேரடித் தாக்குதலாகும். 140 கோடி இந்தியர்களின் உணர்வுகளை அவமதிப்பதாகும்" என்று கூறியுள்ளார்.

வணிகர்கள் மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை மூலம் துருக்கி மற்றும் அஜர்பைஜான் தயாரிப்புகள் நாடு முழுவதும் புறக்கணிக்கப்படும். இந்திய வர்த்தகர்கள் இந்த நாடுகளின் பொருட்களை இறக்குமதி செய்ய மாட்டார்கள். அதேபோல அந்நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்ய மாட்டார்கள். இரண்டு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் இந்திய வணிகர்கள் எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ள மாட்டார்கள். அதேபோல இந்த நாடுகளை சுற்றுலா அல்லது வணிக தலங்களாக விளம்பரப்படுத்த மாட்டார்கள்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு எதிராக இந்தியா மீது பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதற்கு துருக்கியின் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சரி இது பாகிஸ்தான் மேற்கொண்ட தன்னிச்சையான முடிவு என்று வைத்துக்கொண்டாலும், கூட இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உடன் நிற்பதாக துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்திருந்தது, அதன் உண்மை முகத்தை வெளியில் கொண்டு வந்தது. அஜர்பைஜானும் பாகிஸ்தானுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+