இறுதிகட்ட லோக்சபா தேர்தல், 4 தொகுதி சட்டசபை இடைத் தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்தன.. 19ல் வாக்குப்பதிவு
இறுதிக்கட்ட நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
டெல்லி: 7வது மற்றும் இறுதிக் கட்ட லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைந்தது.
7 கட்டமாக திட்டமிடப்பட்ட லோக்சபா தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அறிவிக்கப்பட்டத்தில் இருந்தே பிரச்சாரம் தீவிரமாக நடந்தது.
இரண்டாம் கட்ட தேர்தலின் போது தமிழகத்திலும் 18 சட்டசபை மற்றும் 38 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடந்தது. அடுத்தடுத்து மொத்தமாக 6 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது. இதுவரை 484 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது.

இந்த நிலையில் 7வது மற்றும் இறுதி கட்டமாக 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் மக்களவை தேர்தல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றோடு முடிவடைந்தது. இந்த வாக்குப் பதிவுடன் தமிழகத்தில் 4 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இன்று மாலை 5 மணியோடு நாடு முழுக்க இந்த பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. நாடு முழுவதும் வேலூர் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் நடந்த கலவரம் காரணமாக அங்கு நேற்றே பிரச்சாரம் முடித்துவைக்கப்பட்டுவிட்டது. மற்ற மாநிலங்களில் இன்று முடிவடைந்தது.
இன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத், பிரியங்கா காந்தி ஆகியோர் கடைசி கட்ட பிரச்சாரம் செய்தனர். பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார். இந்த தேர்தலில் அதிக பிரச்சார கூட்டங்களை நடத்தியவர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
அவர் 115க்கும் அதிகமான பிரச்சார கூட்டங்களை நடத்தி உள்ளார். அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 100+பிரச்சார கூட்டங்களை நடத்தி உள்ளார். இறுதிக் கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்ததும், மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications