மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் திருவிழா க்ளைமாக்ஸ்.. நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு!
டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில 2-வது கட்ட சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. இரு மாநிலங்களிலும் நவம்பர் 20-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் இறுதி கட்ட பிராசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள். இதில் 43 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 13-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய 38 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 20-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

முதல்வர் ஹேமந்த் சோரன் (பார்ஹெய்த் தொகுதி), முன்னாள் முதல்வர் சாம்பாய் சோரன் ( சரெய்கேலா), பாபுலால் மராண்டி (தன்வார்), சீதா சோரன் (ஜம்தாரா),கல்பனா சோரன் (காண்டே), ராமேஸ்வரம் ஓரான் (லோகர் தாகா), பசந்த் சோரன் (தும்கா), கீதா கோடா (ஜகநாத்பூர்), சுனில் சோரன் (தும்கா) ஆகியோர் ஜார்க்கண்ட் மாநில 2-வது கட்ட தேர்தலில் களம் காணும் விஐபி வேட்பாளர்கள். 38 தொகுதிகளில் மொத்தம் 528 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ்- ஆர்ஜேடியை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி மற்றும் பாஜக, ஜேடியூ உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஆளும் மகாயுதி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாட்டி இடையே இம்மாநிலத்தில் கடும் போட்டி நிலவுகிறது. மகாயுதி கூட்டணியில் பாஜக 149, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 81, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களில் போட்டியிடுகின்றன. மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ் 101 தொகுதிகளில் போட்டியிடுகிறது. உத்தவ் தாக்கரே சிவசேனா 95, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 86 இடங்களில் களம் காண்கின்றன. 237 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடுகிறது. பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணி 200 இடங்களிலும் ராஜ்தாக்கரேவின் நவநிர்மாண் சேனா தனித்து 125 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
மகாராஷ்டிராவின் 288 தொகுதிகளில் 158 அரசியல் கட்சிகளின் 2,050 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சமமாக 2,086 சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 288 தொகுதிகளில் 4,136 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்ற்னர்.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் இரு மாநிலங்களிலும் நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதனால் அனைத்து கூட்டணிகளின் தலைவர்களும் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications