அதானி குழும கடன் விவரங்களை வெளியிட முடியாது.. நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்! காரணம் இதுதானாம்!
அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என்று அதானி கடன் விவகாரம் தொடர்பான கேள்விக்கு லோக்சபாவில் நிர்மலா சீதாராமன் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
டெல்லி: லோக்சபாவில் அதானி குழுமம் பெற்ற கடன் விவரங்கள் தொடர்பாக தீபக் பாய்ஜ் எம்.பி கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானியின் நிறுவனங்கள், தங்களது பங்குகளின் விலையை மிகைப்படுத்தி விற்பனை செய்து மிகப்பெரிய அளவில் மோசடிகளில் ஈடுபட்டுள்ளன என்று அறிக்கை வெளியானது. அதாவது அமெரிக்காவில் உள்ள பிரபல சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் இந்த அறிக்கை வெளியிட்டது.

அதானி நிறுவனங்களின் மிதான இந்தகுற்றாச்சாட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த அறிக்கையைத் தொடர்ந்து, அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் கோடிக்கும் மேலாக சரிந்தது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி, பாரத ஸ்டேட் வங்கி ஆகியவையும் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து அதானி குழுமம் அதிக அளவில் முதலீடுகளை பெற்றிருந்தது.
எனவே இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவும், கூட்டுக்குழு விசாரணை நடத்தவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தன. ஆனால், மத்திய அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதானி விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு முன்னாள் நீதிபதி சப்ரே தலைமையில் 6 பேரைக் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது.

இந்த நிலையில், லோக்சபாவில் அதானி குழுமம் பெற்ற கடன் விவரங்கள் தொடர்பாக தீபக் பாய்ஜ் எம்.பி கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், ஆர்பிஐ சட்டத்தின்படி எந்த ஒரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வெளியிட முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications