நதிநீர் பிரச்சனை ஒற்றை தீர்ப்பாய மசோதாவிற்கு திமுக கடும் எதிர்ப்பு.. தயாநிதி மாறன் சரமாரி கேள்வி
Recommended Video
டெல்லி: மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு கொண்டு வரும் ஒற்றை தீர்ப்பாய மசோதாவிற்கு நாடாளுமன்றத்தில் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்பிற்காக ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்க மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு மசோதாவை நேற்று தாக்கல் செய்தது. காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே நேற்று இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று தாக்கல் செய்யப்பட்ட நதிநீர் மசோதா மீது இன்று மக்களவையில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது பேசிய திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், நதிகளை தேசியமயமாக்காமல் மத்திய அரசால் ஒன்றும் செய்ய இயலாது என்றார்.
புதிய நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டால் ஏற்கனவே உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகள் என்னவாகும் என கேள்வி எழுப்பியுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்து வரும் கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டமசோதாவிற்கு வலிமை இல்லை என தயாநிதி மாறன் சாடியுள்ளார்.
தற்போது கொண்டு வரப்படும் புதிய சட்டத்தால் நடைமுறையில் உள்ள அனைத்து நடுவர் மன்றங்களும் கலைக்கப்படும். கலைக்கப்பட உள்ள நடுவர் மன்றங்கள் என்னென்ன உத்தரவுகள் பிறப்பித்துள்ளனவோ, அவை நிலுவையில் இருக்கும் என மத்திய அரசு கூறுகிறது.
அப்படியானால் காவிரி மேலாண்மை வாரியத்தின் நிலை என்னவாகும். அரசு முன்பிருந்ததை குறித்து பேசுகிறதே தவிர, பின்னர் ஏற்பட போகும் விளைவுகளில் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பினார்.
அதே போல காவிரி பிரச்சனையில் எப்போதும் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் கர்நாடகத்தின் மீது நடவடிக்கை எடுக்க, உங்கள் புதிய சட்டத்திற்கு வலிமை இல்லை. இது குறித்து அரசு ஏதாவது சொல்ல முடியுமா என்றார். காவிரி ஆற்றில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையால் கர்நாடகம் - தமிழகம் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. நடுவர் மன்ற தீர்ப்புகள் அரசிதழில் வெளியிடபடாதவரை அதை அமல்படுத்த முடிவதில்லை
கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காவிரியிலிருந்து கர்நாடகம் நீர்திறக்கவில்லை என்பதையும் மக்களவையில் தயாநிதி மாறன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு வேலை அளிக்க தான் இதுபோன்ற தீர்ப்பாயங்கள் அமைக்கப்படுகின்றன என தயாநிதி மாறன் சாடினார். நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடகம் தண்ணீர் தர மறுத்தால், அணைகளை கட்டுப்படுத்தும் உரிமையை தமிழகத்திற்கு தர கோரினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications