இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா ஆதரவு.. மூக்கை நுழைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ.. சிவசேனா நச் பதிலடி
டெல்லி: இந்தியாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விசாயிகளுக்கு கனடா ஆதரவாக இருக்கும் என்று அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் தொடர்ந்து 6-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த போராட்டம் குறித்து முதன்முதலாக ஒரு வெளிநாட்டு தலைவர் கருத்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து பஞ்சாப் விவசாயிகள் தலைநகர் டெல்லி நோக்கி பேரணி தொடங்கினார்கள். அரியானா எல்லை, டெல்லி எல்லைகளில் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு ஆகியவற்றை சந்தித்த அவர்கள் ஒரு வழியாக டெல்லிக்குள் நுழைந்தனர். டெல்லி புராரி மைதானத்தில் இன்று 6-வது நானாக அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்துள்ளார். குருநானக்கின் 551 வது பிறந்த நாளையொட்டி இணையதள நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது: விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக இந்தியாவில் இருந்து செய்திகள் வெளிவருகின்றன.நாங்கள் அனைவரும் குடும்பம் மற்றும் நண்பர்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறோம். அமைதியான போராட்டத்தின் மூலம் உங்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க கனடா எப்போதும் துணையாக இருக்கும் என்பதை நான் உங்களுக்கு நினைவு கூறுகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிட வேண்டாம் என்று சிவசேனா அவருக்கு பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி டுவிட்டரிவில் வெளியிட்ட பதிவில், உங்களுடைய கருத்து கவலைப்படதக்க அம்சம்தான். ஆனால் இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை.

இது மற்றொரு நாட்டின் அரசியலுக்கு தீனி அல்ல. நாங்கள் எப்போதும் மற்ற நாடுகளின் உரிமைகளை மதிக்கிறோம். அதேபோல் நீங்களும் மதிக்க வேண்டும். மற்ற நாடுகள் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து கூறுவதற்கு முன்பு, பிரதமர் மோடி இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications