இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி அமைக்க விரும்பும்.. அமைப்புகளை அனுமதிக்க முடியாது.. மத்திய அரசு வாதம்
டெல்லி: இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க விரும்பும் எந்த அமைப்புகளையும் அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
சிமி இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும் போது, மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளது.
மேலும், தடை செய்யப்பட்ட பிறகும் கூட இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்களில் சிமி இயக்கம் ஈடுபட்டு வருவதாகவும் மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

தடை செய்யப்பட்ட சிமி
இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கம் (சிமி) என்ற பெயரிலான அமைப்பு ஒன்று 23 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் செயல்பட்டு வந்தது. இதனிடையே, அந்த அமைப்புக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், நாட்டுக்கு எதிரான சதிச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதன்பேரில் கடந்த 2001-ம் ஆண்டு சிமி இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது.

தடைக்கு எதிராக மனு
5 ஆண்டுகள் விதிக்கப்பட்ட இந்த தடை அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கடந்த 2019-ம் ஆண்டும் சிமி மீது 8-வது முறையாக மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தடையை எதிர்த்து சிமி அமைப்பின் உறுப்பினர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

"இஸ்லாமிய ஆட்சி.."
இதன்பேரில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை சார்பில் பதில் மனு நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: சிமி இயக்கம் இந்திய தேசியத்திற்கு எதிரான ஒரு அமைப்பு. அந்த அமைப்பின் விதிமுறைகள் அனைத்தும் நம் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு முற்றிலும் முரணானது ஆகும். குறிப்பாக, இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்பது சிமி அமைப்பின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இவ்வாறு இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை கோரும் அமைப்புகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

"தடைக்கு பிறகும் இயங்குகிறது"
எனவேதான், சிமி மீது 8-வது முறையாக 2019-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. 2001-இல் தடை செய்யப்பட்ட பிறகும் கூட 30-க்கும் மேற்பட்ட இயக்கங்களுடன் சேர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயல்களிலும் அது ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அந்த மனுவில் மத்திய உள்துறை தெரிவித்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications