NEET SS Selection: நீட் -எஸ்எஸ் தேர்வு முறையில் திடீர் மாற்றத்தை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு
நீட் எஸ்.எஸ். தேர்வு முறையில் திடீர் மாற்றம் குறித்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது
டெல்லி: உயர்சிறப்பு மருத்துவப்படிப்பில் நீட் தேர்வு முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தற்போது நீட் தேர்வானது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. மாணவர்களுக்கு தொடர்ந்து கலக்கத்தை தந்து வருகிறது.
இதனால் நாளுக்கு நாள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைகளை செய்து கொள்கிறார்கள்.. இதில் தமிழகம்தான் முன்னிலையில் உள்ளது.

நீட் தேர்வு முறை
இந்நிலையில், நீட் தேர்வு முறை மாற்றத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.... அதாவது, உயர் சிறப்பு மருத்துவ படிப்பு நீட் தேர்வு முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து, இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது... மேலும் மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்து 41 பேர் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

புகார்
நீட் தேர்வு முறை கடைசி நேரத்தில் மாற்றப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் புகார் அளித்துள்ளனர்... நீட் தேர்வில் கடைசி நேரத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் ரத்து செய்ய மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளனர்... எனவே, நீட் தேர்வை நடத்தும் தேசியத் தகுதித் தேர்வு முகமைக்கு சுப்ரீம் கோர்ட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது... நவம்பர் 13 மற்றும் 14ம் தேதிகளில் நடைபெற உள்ள நீட்-எஸ்.எஸ் தேர்வுக்கான அறிக்கை ஜூலை 23ம் தேதியில் வெளியிடப்பட்டது.

வழக்கு
ஆனால் திடீரென்று நீட் எஸ் எஸ் தேர்வு முறைகள் மாற்றப்பட்டதாக ஆகஸ்ட் 31-ம் தேதி இன்னொரு அறிக்கையை வெளியிட்டது தேர்வு முகமை.. அதனால்தான் தற்போது, மாணவர்கள் இதற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர்... உயர்சிறப்பு மருத்துவப்படிப்பில் நீட் தேர்வு முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புகார்
நீட் - எஸ்.எஸ். தேர்வு முறை கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு உள்ளதாக மனுதாரர்கள் புகார் அளித்துள்ளனர். நீட் - எஸ்எஸ். தேர்வில் கடைசி நேரத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை ரத்து செய்ய மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்... இது தொடர்பான வழக்கு விசாரணை எப்போது, எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications