பொதுத்தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரிய வழக்கு.. தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
டெல்லி: தேர்தலில் அனைவரையும் கட்டாயம் வாக்களிக்க உத்தரவிட வேண்டும் என கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
இந்தியாவில் நடைபெறும் பொதுத்தேர்தல்களில் நாட்டு மக்கள் அனைவரும் வாக்கப்பளிப்பதை கட்டாயமாக்க கோரி வழக்கு தொடரப்பட்டது நாடு முழுவதும் உள்ள அனைத்து வாக்காளர்களும் தேர்தலில் தவறாமல் கட்டாயம் வாக்களிக்கச் செய்யும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது

இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்டது இந்த பொதுநல மனுவிற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது இந்த வழக்கு இந்நிலையில் வழக்கை விசாரித்தது உச்சநீதிமன்றம்
அப்போது வாதிட்ட மத்திய அரசு அனைவரும் வாக்களிப்பதை கட்டாயமாக்குவது பற்றி தேர்தல் ஆணையத்திடம் தான் முறையிட வேண்டும் என்றது. இந்த வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது.
அனைவரும் வாக்களிக்க உத்தரவிட வேண்டும் என கோரிய மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி கே.கே. வேணுகோபால் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் மேலும் இதுதொடர்பாக மனுதாரர் மத்திய தேர்தல் ஆணையத்தை அணுகி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
இதனிடையே மேற்கண்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பலர் தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக உரிமை.
எனினும் பல்வேறு சூழல் காரணமாக பெரும்பான்மையான மக்கள் சொந்த ஊர்களை விட்டு வெளிமாநிலம் அல்லது வெளியூர்களில் வசித்து வருகின்றனர். மேலும் வாக்காளர்கள் வாக்களிக்க போதுமான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து தருவதில்லை.
வாக்களிக்க பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. எந்த தொகுதி ஓட்டையும் எங்கிருந்தும் செலுத்தலாம் என்பது போன்ற பல வசதிகள் செய்து தரப்பட்டால் மட்டுமே கட்டாய சட்டம் இயற்றுவது பற்றி சிந்திக்க முடியும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications