பொதுத்தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரிய வழக்கு.. தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
டெல்லி: தேர்தலில் அனைவரையும் கட்டாயம் வாக்களிக்க உத்தரவிட வேண்டும் என கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
இந்தியாவில் நடைபெறும் பொதுத்தேர்தல்களில் நாட்டு மக்கள் அனைவரும் வாக்கப்பளிப்பதை கட்டாயமாக்க கோரி வழக்கு தொடரப்பட்டது நாடு முழுவதும் உள்ள அனைத்து வாக்காளர்களும் தேர்தலில் தவறாமல் கட்டாயம் வாக்களிக்கச் செய்யும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது

இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்டது இந்த பொதுநல மனுவிற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது இந்த வழக்கு இந்நிலையில் வழக்கை விசாரித்தது உச்சநீதிமன்றம்
அப்போது வாதிட்ட மத்திய அரசு அனைவரும் வாக்களிப்பதை கட்டாயமாக்குவது பற்றி தேர்தல் ஆணையத்திடம் தான் முறையிட வேண்டும் என்றது. இந்த வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது.
அனைவரும் வாக்களிக்க உத்தரவிட வேண்டும் என கோரிய மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி கே.கே. வேணுகோபால் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் மேலும் இதுதொடர்பாக மனுதாரர் மத்திய தேர்தல் ஆணையத்தை அணுகி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
இதனிடையே மேற்கண்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பலர் தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக உரிமை.
எனினும் பல்வேறு சூழல் காரணமாக பெரும்பான்மையான மக்கள் சொந்த ஊர்களை விட்டு வெளிமாநிலம் அல்லது வெளியூர்களில் வசித்து வருகின்றனர். மேலும் வாக்காளர்கள் வாக்களிக்க போதுமான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து தருவதில்லை.
வாக்களிக்க பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. எந்த தொகுதி ஓட்டையும் எங்கிருந்தும் செலுத்தலாம் என்பது போன்ற பல வசதிகள் செய்து தரப்பட்டால் மட்டுமே கட்டாய சட்டம் இயற்றுவது பற்றி சிந்திக்க முடியும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!












Click it and Unblock the Notifications