"இதுவொரு நெருக்கடி நிலை.. உடனடியாக நடவடிக்கை எடுங்கள்..' மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: டெல்லி காற்று மாசு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் காற்று மாசுக்கு விவசாய கழிவுகளை எரிப்பது 10% மட்டுமே காரணம் என மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், மத்திய அரசு பொய் கூறி, உச்ச நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்துவதாக ஆம் ஆத்மி சாடியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிக மோசமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. காற்றை மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் இதுவரை பெரியளவில் பலன் இல்லை.
பஞ்சாப், ஹரியானா போன்ற அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதே டெல்லியில் ஏற்படும் காற்று மாசுக்கு முக்கிய காரணம் எனக் கூறப்பட்டு வந்தது.

வெறும் 10% தான்
இந்நிலையில், டெல்லி காற்று மாசு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, விவசாய கழிவுகளை எரிப்பது டெல்லியில் வெறும் 10% காற்று மாசுக்கு மட்டுமே காரணமாக உள்ளதாகத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்ய காந்த், விவசாய கழிவுகளை எரிப்பது காற்று மாசுக்கு முக்கிய காரணம் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பினார். இதை மத்திய அரசு வழக்கறிஞரும் ஒப்புக்கொண்டார்.

டெல்லி காற்று மாசு
டெல்லியில் பி.எம்.2.5 துகள்களால் ஏற்படும் காற்று மாசில் குளிர் காலத்தில் 4 சதவீதமும் கோடையில் 7 சதவீதம் மட்டுமே விவசாய கழிவுகளை எரிப்பதால் ஏற்படுகிறது என அறிவியல் ஆய்வுகள் கூறுவதாக மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது. PM 2.5 என்பது 2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவாகச் சுற்றுப்புறத்தில் உள்ள மாசு துகள்கள் ஆகும்.

நீதிபதிகள் சாடல்
இதைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி டிஒய் சந்திரசூட், 'இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. விவசாய கழிவுகளை எரிப்பது காற்று மாசுக்கு வெறும் 4% மட்டுமே காரணம். இதையெல்லாம் ஒரு காரணமாகவே கூற முடியாது' என்று குறிப்பிட்டார். தலைநகர் டெல்லியில் தற்போது நிலவும் காற்று மாசை நெருக்கடியான நிலை என்று கூறிய நீதிபதிகள் டெல்லி அரசு நொண்டி சாக்குகளைச் சொல்லியும் பொறுப்புகளைத் தட்டிக்கழித்தும் வருவதாகச் சாடினர்.

நடவடிக்கை எடுங்கள்
இது குறித்து நீதிபதிகள் கூறுகையில், "டெல்லியில் காற்று மாசு மிக மோசமான நிலையை அடையத் தொழிற்சாலைகளும், போக்குவரத்தும் தான் காரணம். இதற்கு விவசாய கழிவுகளை எரிப்பது முக்கியக் காரணம் இல்லை என்றாலும்கூட பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அதிக அளவில் விவசாய கழிவுகள் எரிக்கப்படுகின்றன. விவசாயிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஒரு வாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிமன்றம் உத்தரவு
டெல்லியில் தற்போது நிலைமை மிக மோசமாக உள்ளதால் இங்குள்ளவர்கள் வீடுகளில் இருந்து பணிபுரிய அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் முடிவு எடுக்க வேண்டும். இது குறித்தும் விவசாய கழிவுகளை எரிப்பது குறித்தும் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை அவசர கூட்டத்தை நடத்த வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

மத்திய அரசு பொய் சொல்கிறது
இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், "மத்திய அரசு ஆச்சரியம் அளிக்கும் வகையில் விவசாயிகளை இதில் காக்க முயல்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், விவசாயிகளின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்ள அவர்களுக்கு விருப்பம் இல்லை. காற்று மாசுக்கு விவசாய கழிவுகளை எரிப்பது 10% மட்டுமே காரணம் எனப் பொய்யான ஒரு தகவலை அளித்துள்ளது. காற்றின் தர மேலாண்மை ஆணையத்தின் நேற்றைய கூட்டத்தில் விவசாய கழிவுகளை எரிப்பதால் 35% வரை காற்று மாசு ஏற்படுவதாகக் கூறியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு தவறான ஒரு தகவலை அளித்துள்ளது" என்று தெரிவித்தார்.

ஆம் ஆத்மி சாடல்
அதேபோல ஆம் ஆத்மியும் உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்துவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. டெல்லி காற்று மாசுக்கு விவசாய கழிவுகளை எரிப்பது 35% காரணம் என முதலில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, இப்போது அப்படியே ஒரு யூடர்ன் போட்டு வெறும் 4% காரணம் எனப் பொய் சொல்வதாக ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications