உத்தரவிட்டும் சட்டை செய்யாத கர்நாடகம்.. 24-இல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
Recommended Video
டெல்லி: காவிரியில் தண்ணீர் திறக்காதது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக வரும் 24-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் கூடுகிறது.
காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம் அதன் தலைவர் தலைமையில் கடந்த 7-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம், கேரளம், புதுவை, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் கலந்து கொண்டன.

ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என தமிழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம் உத்தரவிட்டது.
ஆயினும் கர்நாடக அரசு ஒரு சொட்டு நீரை கூட தரவில்லை. எப்போது கேட்டாலும் மழையில்லை என்பதே கர்நாடகத்தின் பதிலாக இருந்தது. இந்த நிலையில் வரும் 24-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழகம், கேரளம், புதுவை, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அப்போது காவிரியில் தண்ணீர் திறக்காதது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications