நீங்கள் விசாரிக்கப்படவே தகுதியற்றவர்கள்.. சிபிஐ வழக்கில் தலைமை நீதிபதி கடும் கோபம்!

சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சிபிஐ சிறப்பு இயக்குநருக்கு எதிரான விசாரணையில் பரபரப்பு தகவல்கள்- வீடியோ

    டெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. அதில் சிபிஐ இயக்குனர் தொடர்பான விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் கடந்த வாரம் தாக்கல் செய்தது.

    அவர் மீதான புகார் மற்றும் மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பான அறிக்கையை கடந்த வாரம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கை மீதான பதில் மனுவை சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா நேற்று தாக்கல் செய்தார். அதன் மீதுதான் இன்று விசாரணை நடந்தது.

    பதில் அறிக்கை

    பதில் அறிக்கை

    நேற்று மாலை சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இந்த விசாரணை அறிக்கை குறித்த தன்னுடைய பதில் மனுவை தாக்கல் செய்தார். அவருக்கு உச்ச நீதிமன்றம் கூடுதல் அவகாசம் அளிக்கவில்லை. இதனால் நேற்று மாலையே உச்ச நீதிமன்றத்தில் அவர் தனது பதில் மனுவை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தார்.

    கோபமாக கொடுத்தார்

    கோபமாக கொடுத்தார்

    இந்த பதில் மனு மீது இன்று விசாரணை நடந்தது. விசாரணை தொடங்கியவுடன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கையில் பேப்பர் ஒன்றுடன் வந்தார். அந்த பேப்பரின் காப்பிகளை அரசு தரப்பிற்கும், அலோக் வெர்மா தரப்பிற்கும் அளித்தார். இதை நீங்களே படியுங்கள். உங்களை விசாரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று நீங்களே கூறுங்கள் என்று கோபமாக கூறினார்.

    என்ன பேப்பர்

    என்ன பேப்பர்

    அந்த பேப்பரில் ஆங்கில ஊடகம் ஒன்றின் செய்தி இருந்தது. அதில் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவின் விவரங்கள் அப்படியே இருந்தது. இந்த பதில் மனு சீலிடப்பட்ட கவரில் அளிக்கப்பட்டது. அது எப்படி லீக் ஆனது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

    எப்படி என்று கேட்டார்

    எப்படி என்று கேட்டார்

    இதை கூட உங்களால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியாதா என்று கோபமாக கேட்டார். அதோடு சிபிஐ அமைப்பில் உள்ள அதிகாரிகளின் பாதுகாப்பு கருதியும் அலுவல் விஷயங்களை கருதியும்தான் சீல் செய்து அறிக்கையை தாக்கல் செய்ய சொன்னோம். ஆனால் அது இப்படி செய்தியில் வந்தால் என்ன அர்த்தம் என்று கேட்டார்கள்.

    ஒத்தி வைத்தார்

    ஒத்தி வைத்தார்

    இதையடுத்து கோபமாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் , நீங்கள் எல்லாம் விசாரிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இவ்வளவு கவனமின்றி இருக்கும் உங்களை நாங்கள் ஏன் விசாரிக்க வேண்டும், என்று கோபமாக கூறினார். இந்த விவரம் எப்படி கசிந்தது என்று இரண்டு தரப்பும் விவரிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 29ம் தேதி ஒத்திவைத்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+