வந்தே பாரத் ரயிலில் இத்தனை சலுகைகளா.. இனி டூருக்கு ஜாலியா பறக்கலாமே! யார் யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வந்தே பாரத் ரயில்களில் மிகப் பெரிய சலுகை காத்திருக்கிறது. இதை யார் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

வந்தே பாரத் எனும் இந்தியாவின் "புல்லட்" வேக ரயில்களை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். தற்போது வந்தே பாரத் மெட்ரோ ரயில்களும் இயக்கப்படவுள்ளன. இதனால் பயண தூரமும், நேரமும் மிச்சமாகும் என்பதால் மக்கள் இதை நாடுகிறார்கள்.

Central government employees can travel in Vande Bharat

வந்தே பாரத் ரயிலில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் இருக்கின்றன. தென் தமிழகத்தில் உள்ள பயணிகள் இந்த ரயில் சேவையால் தங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதாக கூறுகிறார்கள். தற்போது சென்னை- கோவைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

அது போல் விரைவில் சென்னை- நெல்லைக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் பாதுகாப்பு அம்சங்கள், ஏசி வசதி என அத்தனை வசதிகள் இருந்தாலும் இதன் கட்டணம் என பார்க்கும் போது ஏழை, நடுத்தர மக்களுக்கு சற்று அதிகமான தொகையாக இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த நிலையில் மத்திய நிதித் துறையின் தலைமையிலான செலவினத் துறை தற்போது ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ பயணங்களுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கலாம். அது மட்டும் இல்லாமல் அந்த டிக்கெட்டுகளுக்கான தொகையை திரும்ப பெறும் சலுகையும் உள்ளது.

2017 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு சுற்றுலா, பயிற்சி, இடமாற்றம் மற்றும் ஒய்வு பெறுவதற்கான சில தகுதிகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. அந்த சுற்றறிக்கையின் விதிகளுக்குள்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் பயணம் செய்ய வேண்டும்.

மத்திய அரசு ஏற்கெனவே அனுமதித்த பட்டியலில் ப்ரீமியம் ரயில்கள் ப்ரீமியம் தட்கல், சதாப்தி, ராஜ்தானி, தூரந்தோ, தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளன. இந்த ரயில்களில் பயணிக்கும் போது முன்பதிவு மற்றும் பயணத்தின் போது கூடுதல் முன்னுரிமைகள் கிடைக்கும். அண்மையில் மத்திய அரசு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில்களை இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இனி மத்திய அரசு ஊழியர்கள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சுற்றுலா, பயிற்சி, இடமாற்றம், ஓய்வு போன்றவைகளுக்காக பயணிக்கலாம். இதில் ஊழியர்கள் தங்கள் கேடரை பொருத்து பயணிக்கலாம். நிலை 5 அல்லது அதற்கு கீழ் உள்ள கிரேட்டில் உள்ள ஊழியர்கள் முதல் வகுப்பு அல்லது மூன்றாம் ஏசி அல்லது ஏசி நாற்காலி பெட்டியில் பயணிக்கலாம். அது போல் நிலை 6 முதல் 8 வரை உள்ளவர்கள் விமானத்தில் எக்கானமி கிளாஸில் அல்லது ரயில் என்றால் இரண்டாவது ஏசி பெட்டியில் பயணிக்கலாம். இப்படியாக நிலைகளின் அடிப்படையில் அவர்கள் பயணிக்கும் பெட்டிகள் மாறுபடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+