வீட்டில் இருந்தாலும் மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள்.. மத்திய அரசு அறிவுரை
டெல்லி: இரவு நேரங்களில் மக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் மக்கள் வீட்டில் இருந்தாலும் மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை விட்டால் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேறு நிறுவனங்களே தமிழகத்தில் இல்லையா?.. கமல்
இதுகுறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் கூறுகையில் இரவு நேரங்களில் மக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம். ஆக்சிஜன், ரெம்டெசிவர், மருத்துவமனை படுக்கை வசதிகள் குறித்து வெளிப்படையாக அறிவியுங்கள்.
மாநிலங்களுக்கு இடையேயும், உள்ளேயும் போக்குவரத்துக்கு எந்த தடையும் இருக்கக் கூடாது. மெட்ரோ ரயில், பேருந்து போக்குவரத்தில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே பயணிக்க வேண்டும். 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவது என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும்.
Recommended Video
வீட்டில் இருந்தாலும் மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது. தேவையின்றி வெளியே சுற்றுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். அத்துடன் வெளியாட்களை வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.