சபரிமலை விவகாரத்தில் அசம்பாவிதம்.. கேரளா, தமிழ்நாடு, கர்நாடக அரசுகளுக்கு உள்துறை எச்சரிக்கை
டெல்லி: சபரிமலை விவகாரம் தொடர்பாக அசம்பாவிதம் ஏற்படலாம். எனவே தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள், டிஜிபிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
அக்டோபர் 16ம் தேதி இந்தக் கடிதம் அனுப்ப்பப்ட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், அசம்பாவித செயல்கள் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்து அமைப்புகள் நிலக்கல் மற்றும் எருமேலி பகுதிகளில் மிகப் பெரிய போராட்டங்களை நடத்தக் கூடும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
[ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பெண்களால் பரபரப்பு.. அல்லோகல்லப்பட்ட சபரிமலை!]
In a letter dated, 16 Oct MHA had asked Chief Secretaries&DGPs of Kerala, Tamil Nadu&Karnataka to take necessary measures to maintain law&order & 'prevent any untoward incident'. Letter also states 'Hindu outfits plan to organise protest prog on 17.10 at Nilakkal&Erumali village' pic.twitter.com/9CjsEjdDZz
— ANI (@ANI) October 19, 2018
கேரளா தவிர தமிழ்நாடு, கர்நாடகத்திலும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவதாக இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே 3 மாநிலங்களிலும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை எடுக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.