பாசுமதி அல்லாத பிற ரக அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய விதித்த தடையை நீக்கியது மத்திய அரசு
டெல்லி: பாசுமதி அல்லாத பிற ரக அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது. அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக குறிப்பிட அரிசிகளின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடைவிதித்திருந்தது.
உள்நாட்டில் அரிசி தேவையை பூர்த்தி செய்யவும் அரிசியின் சில்லறை விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 20ஆம் தேதி தடை விதித்திருந்தது.

எனினும் பாசுமதி அல்லாத அரிசி மற்றும் பாசுமதி அரிசியின் ஏற்றுமதி கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய உணவு அமைச்சகம் தெளிவுப்படுத்தியிருந்தது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மொத்த அரிசியில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி 25 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இந்த நிலையில்தான் இந்த அரிசிக்கு தடை அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்தியாவிலிருந்து பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் மொத்த ஏற்றுமதி 2022- 2023 ஆம் நிதியாண்டில் 4.2 மில்லியன் டாலராக இருந்தது. முந்தைய ஆண்டில் இது 2.62 மில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் பாஸ்மதி அல்லாத அரிசி தாய்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
உள்நாட்டு சந்தையில் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யவும் உள்ளூர் விலை உயர்வைக் குறைக்கவும் அரசாங்கம் ஏற்றுமதி கொள்கையை 20 சதவீத ஏற்றுமதி வரியுடன் இலவசம் என்பதில் இருந்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தடை என அரிசி ஏற்றுமதி கொள்ளையில் திருத்தியிருந்தது.
அரிசி ஏற்றுமதி 2022- 2023-ஆம் நிதியாண்டின் செப்டம்பர் - மார்ச் கால கட்டத்தில் 42.12 லட்சம் டன்னாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டின் செப்டம்பர் - மார்ச் காலகட்டத்தில் 33.66 லட்சம் டன்னாக இருந்தது. அரிசி ஏற்றுமதியில் 35 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன்படி புழுங்கல் அரிசிக்கான ஏற்றுமதி வரியை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications