டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு
டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதாவையும், "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்தையும் மீண்டும் முன்னெடுக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் ரீதியாக ஆதரவை ஏற்படுத்தி பின்னர் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. ஆனால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் இந்த மசோதா நிறைவேறவில்லை. இந்த நிலையில்தான், தற்போது மீண்டும் அந்த மசோதாவை கொண்டு வரலாமா? என ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

திமுக, திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி
சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியுள்ளது. தமிழ்நாட்டில் திமுக தோல்வியை தழுவியது. இதனால், திமுக இந்தியா கூட்டணியில் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், இந்தியா கூட்டணியின் பிரதான கட்சியாக உள்ள காங்கிரஸ் - திமுகவுடனான கூட்டணியை முறித்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பலவீனம் அடையும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் கொண்டு வரலாம் என பாஜக நினைப்பதாக கருதப்படுகிறது.
அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறைவடைந்த பிறகு இந்த நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என்று தனது கூட்டணி கட்சிகளிடம் பாஜக ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. பிற கட்சிகளையும் இந்த முயற்சியில் இணைக்க முடியுமா என்றும் பாஜக தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். 2029 ஆம் ஆண்டில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும், 'தொகுதி மறுவரையறையை' எடுத்து முடித்தால் சாதகமாக இருக்கும் என பாஜக கருதுகிறதாம்.
2029-க்குள் நிறைவேற்ற..
அதே நேரத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடவடிக்கையும் 2029 க்குள் நிறைவேற்ற வேண்டும் என்று பாஜக தலைவர்கள் விரும்புகிறார்களாம். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் பின்னடைவை சந்தித்து இருப்பதால் இந்த சூழலை பயன்படுத்தி, இந்த முக்கிய மசோதாக்களை நிறைவேற்றலாம் என்று வியூகம் வகுத்து வருகிறதாம். அரசு தரப்பிலும் இந்த மசோதாக்களுக்கான ஆயத்தங்கள் தொடங்கிவிட்டதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications