தமிழ் உட்பட 22 மொழிகளில் EIA வரைவு அறிக்கை வெளியிடுவதற்கு எதிர்ப்பு- மத்திய அரசு மேல்முறையீடு
டெல்லி: மத்திய அரசின் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை (EIA) தமிழ் உட்பட 22 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மத்திய அரசு, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கையில், சுற்றுச் சூழல் தொடர்பான அனுமதி இல்லாமல் தொழிற்சாலைகள், விரிவாக்கப் பணிகள் தொடங்க அனுமதிக்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

இதற்கு எதிராக சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா லாக்டவுன் காலத்திலும் நாடு முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சமூக வலைதளங்களிலும் இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இது தொடர்பான வழக்கில் கடந்த ஜூன் 30-ந் தேதியன்று டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு மீது பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை ஆக.11 வரை நீடிக்க வேண்டும்; மேலும் இந்த வரைவு அறிக்கையை தமிழ் உட்பட 22 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. ஆனால் உச்சநீதிமன்றமோ, டெல்லி உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications