தமிழ் உட்பட 22 மொழிகளில் EIA வரைவு அறிக்கை வெளியிடுவதற்கு எதிர்ப்பு- மத்திய அரசு மேல்முறையீடு
டெல்லி: மத்திய அரசின் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை (EIA) தமிழ் உட்பட 22 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மத்திய அரசு, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கையில், சுற்றுச் சூழல் தொடர்பான அனுமதி இல்லாமல் தொழிற்சாலைகள், விரிவாக்கப் பணிகள் தொடங்க அனுமதிக்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

இதற்கு எதிராக சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா லாக்டவுன் காலத்திலும் நாடு முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சமூக வலைதளங்களிலும் இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இது தொடர்பான வழக்கில் கடந்த ஜூன் 30-ந் தேதியன்று டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு மீது பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை ஆக.11 வரை நீடிக்க வேண்டும்; மேலும் இந்த வரைவு அறிக்கையை தமிழ் உட்பட 22 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. ஆனால் உச்சநீதிமன்றமோ, டெல்லி உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications