உஷாராக இருங்கள்.. பாதுகாப்பை பலப்படுத்துங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
Recommended Video
டெல்லி: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் அசாதாரண சூழல் நிலவி வருவதால் மாநில அரசுகள் பாதுகாப்பை பலப்படுத்தும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை இன்று மத்திய அரசு ரத்து செய்து விட்டது. மேலும் மாநிலத்தையும் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப் போவதாக அறிவித்து விட்டது.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருமளவில் படையினர் குவிக்கப்பட்டுள்ளன. முக்கியத் தலைவர்களையும் அரசு வீட்டுக் காவலில் வைத்து விட்டது. இதனால் அங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
இந்த நிலையில் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கலாம் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இதையடுத்து மாநில அரசுகளை அது உஷார்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்களுக்கு ஒரு உத்தரவினை அனுப்பியுள்ளது.
அதில், மாநிலம் முழுவதும் காவல்துறையினர் உஷார் நிலையில் வைக்கப்பட வேண்டும். முக்கிய இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முடுக்கி விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
பல்வேறு கட்சிகள் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து போராட்டங்களை அறிவித்து வருகின்றன. கம்யூனிஸ்ட் கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications