காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களை குறிவைக்கும் மத்திய அரசு.. ஆதார் எண்ணை கட்டாயமாக்க தீவிரம்
Recommended Video
டெல்லி: இந்தியாவை தொடர்ந்து தற்போது காஷ்மீரிலும் அனைத்துக்கும் ஆதார் எண் என்ற திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு தீவிரமாகியுள்ளது. இது வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் செய்து முடிக்கப்படும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு கொண்டு வந்தது. மத்திய அரசின் திட்டங்களையும் மானியங்களையும் பெற 12 இலக்க ஆதார் எண் அவசியம் என்பதால் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் அலைந்து திரிந்து எடுத்தனர்.
மேலும் இந்த ஆதார் எண்ணானது வங்கிக் கணக்கு, பான் எண் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டது. கண்ணின் விழித்திரை, கைரேகை உள்ளிட்டவை எடுத்துக் கொள்ளப்படுவதால் இதில் போலி எண் உருவாகவோ ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட எண்கள் உருவாகவோ முடியாது.

காஷ்மீர்
இந்த நிலையில் இந்தியா முழுவதும் இந்த திட்டம் பரந்து விரிந்திருந்த போதிலும் காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு அமலில் இருந்ததால் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இயற்றும் சட்டங்கள் காஷ்மீருக்கு பொருந்தாத நிலை இருந்தது.

மத்திய அரசு
தற்போது 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதால் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து திட்டங்களும், சட்டங்களும் ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தும். இந்த நிலையில் காஷ்மீரில் உள்ள அனைத்து மக்களும் மத்திய அரசின் திட்டங்களை பெறவும், மானியத்தை பெறவும் ஆதார் எண் அவசியம் என்பதால் அந்த திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு தீவிரமாகவுள்ளது.

முடுக்கிவிட
குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. வங்கிகள், தபால் நிலையங்கள், பொது சேவை மையங்கள் மூலம் இந்த சேவை முடுக்கிவிடவுள்ளது.

மத்திய அரசு
இந்த பணிகள் அனைத்தும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடிவடைய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆதார் திட்டத்தின் மூலம் அரசு திட்டங்கள் காஷ்மீர் மக்களுக்கு கிடைத்தால் அந்த யூனியன் பிரதேசம் வளர ஏதுவாக இருக்கும் என்பது மத்திய அரசின் நம்பிக்கையாகும்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications