மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு திரும்பலாம்! இது யாருக்கு பொருந்தும்.. என்ன செய்ய வேண்டும்?
குறிப்பிட்ட அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய முறை மாற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி: புதிய ஓய்வூதிய முறை அமலுக்கு வரும் முன்பு விளம்பரப்படுத்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பித்த மத்திய அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குச் செல்ல ஒரு வாய்ப்பை தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒரு வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய முறைக்குத் திரும்பலாம்.
இந்தியாவில் இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கும் பெரும்பாலான மாநில அரசு ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதிய முறையே பின்பற்றப்படுகிறது. இருப்பினும் பழைய ஓய்வூதிய முறை வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் பல மாநிலங்களில் இந்த ஓய்வூதிய முறை பின்பற்றப்படும். இப்போது கூட சில மாநிலங்கள் மீண்டும் புதிய ஓய்வூதிய முறையில் இருந்து பழைய ஓய்வூதிய முறைக்குத் திரும்ப முயன்று வருகின்றனர்.

பழைய ஓய்வூதிய திட்டம்
இருப்பினும், மத்திய அரசே பழைய ஓய்வூதிய முறை நிதிநிலையை ஆபத்தில் தள்ளும் என எச்சரித்து வருகிறது. பிரதமர் மோடியும் அண்டை நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடியைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்பும் மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டங்களைக் கொண்டு வந்தால் நம் குழந்தைகளின் எதிர்காலமே முற்றிலுமாக பாழாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், பல தொழிலாளர் அமைப்பு பழைய ஓய்வூதிய முறையே வலியுறுத்தி வருகிறது.

ஒரு வாய்ப்பு
இதற்கிடையே மத்திய அரசு முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது புதிய ஓய்வூதிய முறை 2004ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது அனைவருக்கும் தெரியும். இதனிடையே டிசம்பர் 22, 2003க்கு முன் விளம்பரப்படுத்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பித்த மத்திய அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குச் செல்ல ஒரு வாய்ப்பை தர அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒரு வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய முறைக்குத் திரும்பலாம்.

யாருக்கு பொருந்தும்
டிசம்பர் 22, 2003க்கு முன் வேலைவாய்ப்பு குறித்து அறிவிக்கப்பட்டாலும், புதிய ஓய்வூதிய முறை நடைமுறைக்கு வந்த ஜனவரி 1, 2004ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களும் இப்போது புதிய ஓய்வூதிய முறையில் தான் உள்ளனர். அவர்களுக்குத் தான் இந்த ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய முறைக்குத் திரும்ப ஆகஸ்ட் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் ஆட்சேர்ப்பு செயல்முறை தாமதமாகி 2004இல் பணியில் சேர்ந்த மத்திய ஆயுதப்படை (CAPF) பணியாளர்கள் மற்றும் பிற மத்திய அரசு ஊழியர்களுக்கு இது பொருந்தும்.

புதிய ஓய்வூதிய முறை
புதிய ஓய்வூதிய தொகையில் வரவு வைக்கப்பட்ட பணியாளர்களின் பங்களிப்பு, அவர்கள் பழைய ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுத்தால் தனிநபரின் பொது வருங்கால வைப்பு நிதிக்கு மாற்றப்படும்.. மத்திய பாஜக அரசு வெளிப்படையாகவே மீண்டும் பழைய ஓய்வூதியத்திற்குத் திரும்ப எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தேவையற்ற நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பது அவர்களின் வாதம். இப்போது 23,65,693 மத்திய அரசு ஊழியர்களும், 60,32,768 மாநில அரசு ஊழியர்களும் புதிய ஓய்வூதிய முறையில் உள்ளனர். மேற்கு வங்கம் தவிர, அனைத்து மாநிலங்களும் புதிய ஓய்வூதிய முறைக்கு மாறிவிட்டன.

ஏன் இந்த முடிவு
புதிய ஓய்வூதிய முறை அமலுக்கு வரும் முன்பு, அறிவிக்கப்பட்ட வேலைகளில் சேர்ந்தவர்களுக்குப் பழைய ஓய்வூதிய முறையே தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுக்க பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் எந்தவொரு வழக்கிலும் அரசால் வெல்ல முடியவில்லை. பல நீதிமன்ற உத்தரவுகளில் புதிய ஓய்வூதிய முறை அமலுக்கு வரும் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தால் அவர்கள் பழைய ஓய்வூதிய முறைக்குச் செல்லலாம் என்றே நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளனர். இதுபோன்ற வழக்குகள் அதிகரிக்கும் நிலையில், மத்திய அரசே இப்படி பணியில் சேர்ந்தவர்கள் பழைய ஓய்வூதிய முறைக்கு மாறும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

பழைய ஓய்வூதிய முறை
நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாகப் பல எம்பிக்கள் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இதில் எத்தனை பேர் பயனடைவார்கள்.. இதனால் அரசுக்குக் கூடுதலாக எவ்வளவு செலவு ஏற்படும் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஓய்வு பெறும் அரசு ஊழியர் வாழ்நாள் முழுக்க தேவையான வருமானத்தைப் பெறுவார்கள்.. பொதுவாகக் கடைசியாகப் பெறப்பட்ட சம்பளத்தில் 50%க்காக இது இருக்கும் ஓய்வூதியத்துக்கான செலவை அரசே ஏற்கும். இந்த முறையை வாஜ்பாய் அரசு 2003இல் நீக்கிவிட்டு, புதிய ஓய்வூதிய முறையைக் கொண்டு வந்தது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications