மெல்ல வந்து சங்கிலி பறித்த திருடர்கள்.. மடக்கி பிடித்து.. இழுத்து போட்டு அடி வெளுத்த 2 பெண்கள்
Recommended Video
டெல்லி: "வா இங்கே.. எங்க தப்பிச்சி ஓட பார்க்கிறே"... என்று 2 கொள்ளையர்களை 2 பெண்கள் நடுத்தெருவில் தூக்கி போட்டு மிதிக்கும் வீடியோ காட்சி வைரலாகிறது.
டெல்லியில் நாங்லோய் என்ற இடத்தில் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி மாலை நடந்த சம்பவம் இது. அப்போது 2 பெண்கள், ஒரு ரிக்ஷாவில் வந்து தெருவில் இறங்குகிறார்.
பிறகு ரோட்டை கடக்க முயன்றபோது, பைக்கில் 2 பேர் வருகிறார்கள். 2 பேருமே ஹெல்மட் போட்டுள்ளனர். பைக்கை அவர்கள் அருகில் ஸ்லோ செய்ததும், பின்னாடி உட்கார்ந்திருந்த இளைஞர், திடீரென பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை சரக்கென பறித்தார்.
உடனே பைக்கை எடுத்து பறக்கவும் தயாராயினர். ஆனால் சுதாரித்த அந்த பெண்களோ செயின் பறித்த நபரை அப்படியே பைக்கோடு இழுத்து பிடித்தார். இதில் பைக் கீழே சாய்ந்ததில் இளைஞர்களும் குப்புற விழுந்தனர். பிறகு செயின் பறித்தவனை 2 பெண்களும் சரமாரி அடித்தனர்.
பொருளாதார மந்தநிலை.. மன்மோகன்சிங் எச்சரிக்கையை கேட்டு நடங்க... மத்திய அரசுக்கு சிவசேனா அட்வைஸ்
அதற்குள் பைக்கை ஓட்டி வந்த நபர், தலையில் ஹெல்மெட்டோடு தெறித்து ஓடினார். சிக்கி கொண்ட இளைஞனை, பொதுமக்களும் சேர்ந்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் இந்த காட்சி பதிவானதையடுத்து, இப்போது வெளியாகி வைரலாகிறது.