தப்பினார் புஷ்கர் சிங் தாமி! இடைத்தேர்தலில் பெரும் வெற்றி.. உத்தரகண்ட் முதல்வர் பதவியை தக்க வைப்பு
டெல்லி: உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி போட்டியிட்ட சம்பாவத் தொகுதியின் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் உடன் உத்தரகண்ட் மாநிலத்திற்கும் கடந்த பிப். மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் கூட, உத்தரகண்ட்டில் பாஜகவுக்கு எதிரான மனநிலை உள்ளதாகவும் இந்த முறை தாங்கள் ஆட்சி அமைப்பது உறுதி என்றும் தொடர்ந்து கூறி வந்தனர்.

உத்தரண்ட் தேர்தல்
ஆனால், கடந்த மார்ச் மாதம் வெளியான தேர்தல் முடிவுகள் இதற்கு நேர்மாறாக அமைந்தது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 47 இடங்களில் வென்றது. இது கடந்த தேர்தல் உடன் ஒப்பிடுகையில் 10 இடங்கள் குறைவு என்றாலும் கூட ஆட்சி அமைக்க இது போதுமானதாக இருந்தது. தேர்தல் முடிவைப் பெரிதும் எதிர்பார்த்து இருந்த காங்கிரசுக்கு வழக்கம் போல ஏமாற்றமே மிஞ்சியது. அக்கட்சி வெறும் 19 இடங்களில் மட்டுமே வென்று இருந்தது.

தோல்வி
பாஜக என்ன தான் தனிப்பெரும்பான்மை உடன் வென்று ஆட்சியை அமைத்து இருந்தாலும் கூட, முதல்வராகத் தேர்தலில் களமிறங்கிய புஷ்கர் சிங் தாமி தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்து இருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட புவன் சந்திர கப்ரி சுமார் 7000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மாநில முதல்வரே தேர்தலில் தோல்வி அடைந்தது பாஜகவுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது.

இடைத்தேர்தல்
சட்டசபைத் தேர்தலில் புஷ்கர் சிங் தாமி தோல்வி அடைந்து இருந்ததால், அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் முதல்வராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பாஜக தலைமை முதல்வர் பதவிக்கு மீண்டும் புஷ்கர் சிங் தாமி பெயரையே டிக் அடித்தது. இருப்பினும், தேர்தலில் தோல்வி அடைந்து இருந்ததால், அடுத்த 6 மாதத்திற்குள் அவர் சட்டசபை உறுப்பினராகத் தேர்வாக வேண்டிய கட்டாயம் இருந்தது.

வெற்றி
இந்தச் சூழலில் சம்பாவத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் புஷ்கர் சிங் தாமி களமிறங்கினார். இதில் அவர் சுமார் 58,258 அல்லது 92.9 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், காங்கிரஸின் நிர்மலா கெஹ்டோரி வெறும் 3,233 அல்லது 5.16 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றார். இதன் மூலம் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சுமார் 55025 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பாஜக மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு நன்றி என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications