ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து.. ஜனாதிபதியிடம் மனு அளித்தார் சந்திரபாபு நாயுடு
டெல்லியில் குடியரசு தலைவரை இன்று நேரில் சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு
Recommended Video

டெல்லி: ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரிஅம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் இன்று ஜனாதிபதியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இதன் உச்சக்கட்டமாக ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசை கண்டித்து, அவர் பாஜகவுடனான கூட்டணியில் இருந்தே விலகினார். இந்த விவகாரத்தில் இருந்துதான் பாஜகவுடன் குறிப்பாக மோடியை பகிரங்க விமர்சனம் செய்ததுடன், பாஜகவுக்கு எதிரான பல போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்.

நேரில் ஆதரவு
அதன்படி நேற்றுகூட, டெல்லியில் அவரது தலைமையில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துவிட்டு போனார்கள்.

எதிர்வினைகள்
அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, ஆந்திரத்துக்கு மத்திய அரசு இழைத்துள்ள அநீதியை எதிர்ப்பதாகவும், இந்த அநீதி தேசிய ஒருமைப்பாட்டில் எதிர்வினைகளை கண்டிப்பாக உருவாக்கும் என்று 5 கோடி ஆந்திரமக்கள் சார்பில் எச்சரிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

சிறப்பு அந்தஸ்து
பின்னர் உண்ணாவிரத போராட்டத்தை அடுத்து, குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்தை இன்றைய தினம் சந்தித்து ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை நேரில் முறையிட்டு அது சம்பந்தமான மனுவையும் அளிக்க போவதாகவும் நாயுடு அறிவித்திருந்தார்.

மனு அளித்தனர்
அதன்படி, குடியரசு தலைவரை சந்திப்பதற்கான பேரணி இன்று காலை சந்திரபாபு நாயுடு தலைமையில் தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி நடைபெற்ற இந்த பேரணியில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு சந்திரபாபு நாயுடுவுடன் தெலுங்கு தேசம் உள்ளிட்ட எம்பிக்களும் உடன் சென்றனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications