கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் எப்படி நிறைவேற்றி கொள்வது என்பது எங்களுக்கு தெரியும்- நாயுடு மிரட்டல்
Recommended Video

டெல்லி: கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் எப்படி நிறைவேற்றிக் கொள்வது என்பது எங்களுக்கு தெரியும் என சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை நிறைவேற்றாததால்தான் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து நாயுடு விலகினார்.

எனினும் சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேச எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க நாயுடு முடிவு செய்தார்.
அதன்படி டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் மரியாதை செலுத்தினார். பின்னர் ஆந்திர பவனில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆந்திர மக்களின் சுயமரியாதையை காப்பாற்றவே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
ஆந்திர சுயமரியாதை மீது தாக்குதல் நடத்தினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் எப்படி நிறைவேற்றிக் கொள்வது என்பது எங்களுக்கு தெரியும். தனி மனிதனை தாக்கி பேசுவதை பிரதமரும் மத்திய அரசும் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார் சந்திரபாபு நாயுடு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications