சட்டத்துறையில் இருந்து மாற்றம்.."இது தண்டனை கிடையாது" மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ சொல்றதை கேளுங்க
டெல்லி: புவி அறிவியல்கள் துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட கிரண் ரிஜிஜூ, "இந்த துறை மாற்றம் தண்டனை கிடையாது. இது அரசின் திட்டமாகும். பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டமாகும்" என்று கூறினார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நேற்று திடீரென சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த கிரண் ரிஜிஜூ அப்பொறுபில் இருந்து விடுவிக்கப்பட்டு புவி அறிவியல்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். புதிய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன்ராம் மேக்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டம் மற்றும் நீதித்துறை என முக்கியமான துறையில் இருந்த கிரண் ரிஜிஜூவுக்கு முக்கியத்துவம் இல்லாத பொறுப்பு அளிக்கப்பட்டது. கிரண் ரிஜிஜூவை பொறுத்தவரை முதலில் விளையாட்டு மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்து வந்தார். சட்டத்துறை அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத் அப்பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து சட்டத்துறை அமைச்சராக கிரண் ரிஜிஜூ நியமனம் செய்யப்பட்டார்.
வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தை சேர்ந்த கிரண் ரிஜிஜூ சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதலே, நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். கொலீஜியம் முறை, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்ற அளவுக்கு தனது விமர்சனங்களை முன்வைத்தார்.
கொலிஜியம் தேர்வு முறை புதிராக இருப்பதாகவும் இதில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்த வேண்டும், நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் அமைப்பில் மத்திய அரசின் பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும் என்று கிரண் ரிஜிஜூ கூறி வந்தார். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு அவர் கடிதமும் எழுதி இருந்தார்.
ஏற்கனவே இது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு எழுதப்பட்ட கடிதங்களின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக அனுப்பப்பட்ட கடிதம் இது எனவும் கிரண் ரிஜிஜூ கூறி வந்த நிலையில்தான் சட்டத்துறை பொறுப்பில் இருந்து முக்கியத்துவம் இல்லாத துறைக்கு மாற்றப்பட்டார். புவி அறிவியல்கள் துறை அமைச்சராக இன்று கிரண் ரிஜிஜூ பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜூ, "இந்த துறை மாற்றம் தண்டனை கிடையாது. இது அரசின் திட்டமாகும். பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டமாகும். யாராவது ஒருவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில் எந்த தவறும் இல்லை. எனக்கு எதிராக பேசுவதுதான் எதிர்க்கட்சிகளின் வேலையாகும். எனவே அவர்கள் பேசட்டும்" என்றார். அப்போது அவரிடம் நீதித்துறையுடனான மோதல் குறித்து கேட்ட போது, "அரசியல் பேசுவதற்கான நாள் இது இல்லை" என்று பதிலளிக்க மறுத்து விட்டார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications