காங்கிரஸ் சறுக்கிய இடத்தில் ஸ்கோர் செய்த பாஜக.. சத்தீஷ்கரில் தோல்விக்கு இதுதான் காரணமா?
ராய்ப்பூர்: சத்தீஷ்கர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து விடலாம் என்ற கனவில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் முடிவு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சத்தீஷ்கரில் காங்கிரஸ் கோட்டை விட்டது எங்கே என்பது குறித்த தகவல்களை பார்க்கலாம்.
சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறின.

ஆனால், தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. சத்தீஷ்கரில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அக்கட்சிக்கு ஆதரவு இல்லாதது என்பதே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டு சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயம் அடைந்தனர். காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு ஆளும் அரசு மீது பழங்குடியின மக்கள் கோபம் ஏற்படுவதற்கு ஒருகாரணமாக அமைந்தது. அதேபோல், மலப்பகுதிகளில் கிடைக்க கூடிய பொருள்களின் விலை வீழ்ச்சி அடைந்ததும் பழங்குடியின மக்கள் கோபம் அடைவதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
இதனால் பழங்குடியின மக்கள் ஆதிக்கம் நிறைந்த தொகுதிகளில் கடந்த முறை 15 இடங்களில் மட்டுமே பாஜக வென்றது. ஆனால் இந்த முறை இது அப்படியே 54 ஆக அதிகரித்தது. பாஜக சத்தீஷ்கரில் ஆட்சியை பிடிக்க பழங்குடியின மக்களின் வாக்குகள் பெரிதும் கை கொடுத்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications