பெருநகரங்கள், நகரங்களை மூடும் அறிவிப்பை பிரதமர் வெளியிட வேண்டும்: ப. சிதம்பரம்
டெல்லி: கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த பெருநகரங்கள், நகரங்களை மூடும் அறிவிப்பை பிரதமர் மோடி இன்று வெளியிட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
கொரோனாவால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது. 170-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் 2-வது நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் நகரங்களை முடக்கினால் சமூகங்களுக்கு கொரோனா பரவுதல் என்கிற நிலையை தவிர்க்கலாம் என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது.
What will the PM announce at 8 pm today?
— P. Chidambaram (@PChidambaram_IN) March 19, 2020
I will be disappointed if the PM did not announce a total lockdown, at least of all towns and cities, for a period of 2-4 weeks.
Anything less will be letting down this country.
இதனையே மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரமும் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று இரவு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இதனை குறிப்பிட்டுள்ள ப. சிதம்பரம், பெருநகரங்கள், நகரங்களை மூடும் அறிவிப்பை பிரதமர் வெளியிடாவிட்டால் ஏமாற்றம் அடைவேன் என குறிப்பிட்டுள்ளார்.