"பயோ ஆயுதம்!" பின்னணியில் அமெரிக்கா? சீன மையத்தில் இருந்து பரவிய கொரோனா! வூஹான் ஆய்வாளர் பகீர்
டெல்லி: கொரோனா பரவல் இப்போது தான் ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், இப்போது அதன் தோற்றம் குறித்து சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நம்மை கொரோனா வைரஸ் வைத்துச் செய்துவிட்டது. உலக வல்லரசுகள் அமெரிக்கா தொடங்கி ஆப்பிரிக்கா வரை அனைத்து நாடுகளுமே கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இப்போது தான் நாம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறோம். உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் தீவிரமாக முயன்று வேக்சினை கண்டுபிடித்ததே கொரோனா பாதிப்பு எளிதாகக் கட்டுக்குள் வரக் காரணமாக அமைந்தது.

கொரோனா
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தாலும் கூட இன்னுமே கொரோனா குறித்துப் பல மர்மங்கள் நீட்டித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கொரோனா பாதிப்பு எப்படி முதலில் பரவியது என்பதில் குழப்பம் தொடர்கிறது. சீன ஆய்வாளர்கள் வௌவாலில் இருந்தே கொரோனா பரவியதாகக் கூறுகின்றனர். அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்ட வௌவாலில் புனுகு பூனை தின்றதாகவும்.. அதன் கறியை மனிதர்கள் உண்ணும் போது கொரோனா வைரஸ் மனிதர்களுக்குப் பரவியதாகவும் கூறப்பட்டது. சீனாவுக்குச் சென்று ஆய்வு செய்த மருத்துவ வல்லுநர்களும் கூட இதே கருத்தையே முன்வைத்தனர்.

சீன ஆய்வகம்
அதேநேரம் மற்றொரு புறம் வூஹானில் உள்ள வைராலஜி மையத்தில் மனிதர்களால் இந்த கொரோனா பரவியதாகவும் தகவல் வெளியானது. இதற்கான ஆதாரங்கள் என பல்வேறு தரவுகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் இந்த வைரலாஜி மையத்தில் பணிபுரிந்து வந்தவர்கள் தான். பல நாடுகளில் கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வந்துவிட்ட இன்னுமே கூட இந்த மர்மத்திற்கு மட்டும் நமக்கு விடை கிடைக்கவில்லை. இதற்கிடையே வைரலாஜி மையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர் ஒருவர் இது தொடர்பாகப் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஆண்ட்ரூ ஹஃப்
அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரூ ஹஃப். இவர் சீனாவின் வூஹான் வைராலஜி மையத்தில் கொஞ்சக் காலம் பணியாற்றியுள்ளார். இவர் தி ட்ரூத் அபவுட் வூஹான் என்ற புத்தகத்தில் கொரோனா தொடர்பாகவும் வூஹான் வைரஜி மையம் தொடர்பாகவும் பல முக்கிய தரவுகளைத் தெரிவித்துள்ளார். இவர் EcoHealth Alliance என்ற அமைப்பின் துணைத் தலைவராக இருந்துள்ளார். இந்த அமைப்பு தொற்று பாதிப்புகள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. அவரது இந்த புதிய புத்தகத்தின் சில குறிப்பிட்ட பகுதிகள் பிரிட்டன் ஆங்கில ஊடகம் ன்றில் வெளியாகி உள்ளது.

பாதுகாப்பு இல்லை
அதில் அவர், "சீனாவின் வூஹான் மையம் போதிய பாதுகாப்பு இல்லாமல் செயல்பட்டது. அங்கு பயோ பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு, எதாவது மோசமாக நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த போதுமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லை.. 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வகையான கொரோனா வைரஸ்களை வைத்து இந்த வூஹான் ஆய்வு மையம் ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வு மையத்தில் இருந்து வைரஸ் கசிந்திருக்கலாம். ஏனென்றால் அங்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை" என்று அதில் கூறியுள்ளார்.

அமெரிக்கா நிதி
இந்த வூஹான் மையத்திற்குப் பல காலம் தேசிய சுகாதார நிறுவனம் என்ற அமைப்பு தான் நிதியுதவி அளித்து வந்தது. இந்த தேசிய சுகாதார நிறுவனம் அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் அமைப்பாகும். கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பு வூஹான் மையத்திற்கு அமெரிக்கா தொடர்ச்சியாக நிதி அளித்து வந்துள்ளது. இருப்பினும், போதிய பாதுகாப்பு நடவடிக்கை கூட இல்லாத ஒரு ஆய்வு மையத்திற்கு அமெரிக்கா எப்படி நிதியளிக்கலாம் என்ற கேள்விகளும் அமெரிக்காவிலேயே எழுந்துள்ளது.

பயோ ஆயுதம்
ஆண்ட்ரூ ஹஃப் மேலும் கூறுகையில், "மற்ற உயிரினங்களை கொரோனா வைரஸ் எப்படித் தாக்கும் என்பது குறித்து வூஹான் மையத்தில் பல ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தது. இது மரபணு ரீதியாக மாற்றப்பட்ட ஒரு வைரஸ் என்பது கொரோனா பரவ தொடங்கிய முதல் நாளில் இருந்தே சீனாவுக்கு நன்கு தெரியும். இந்த வைரஸ் தான் வூஹான் ஆய்வகத்தில் இருந்து லீக்காகி உள்ளது. ஆபத்தான இந்த உயிரி தொழில்நுட்பம் குறித்து போதிய பாதுகாப்பு இல்லாமல் ஆய்வு செய்த சீனாவுக்கு நிதி கொடுத்ததே அமெரிக்கா செய்த தவறு தான். நாம் அவர்களுக்கு பயோ ஆயுதத்தைக் கொடுத்துப் போல ஆகிவிட்டது" என்று அதில் கூறியுள்ளார்.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications