லடாக் எல்லையில் 40 சீன வீரர்களை கொன்றது இந்தியா.. மறைக்கிறது சீனா.. மத்திய அமைச்சர்
டெல்லி: லடாக் எல்லையில் நடந்த மோதலில் சீன ராணுவத்தினர் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பர் என்றும் அவர்கள் எப்போதுமே உயிரிழப்புகளை மறைத்து வருகிறார்கள் என்றும் மத்திய அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.
Recommended Video
லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் சீனா கடந்த 17-ஆம் தேதி நடத்திய திடீர் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். 76 பேர் காயமடைந்தனர். பதிலடிக்கு இந்திய வீரர்களும் தாக்கினர். இதில் ஏராளமான சீன ராணுவத்தினர் உயிரிழந்திருக்கக் கூடும் என இந்தியா தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கு சீனாவின் அத்துமீறலே காரணம் என இந்தியா தெரிவித்து வரும் நிலையில் சீனாவோ இந்திய வீரர்கள்தான் அத்துமீறினர் என பொய்யான தகவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
இந்த நிலையில் லடாக் எல்லையில் நடந்த மோதல் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சரும் முன்னாள் ராணுவ தலைமை ஜெனரலுமான விகே சிங் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் லடாக் எல்லையில் நடந்த மோதலில் இந்தியா 20 வீரர்களை இழந்துள்ளது. ஆனால் சீனாவோ 40க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்தது. சீனா தங்கள் உயிரிழப்புகளை மறைக்கிறது.
இப்போது என்றில்லை, அவர்கள் எப்போதுமே அவர்கள் தரப்பு உயிரிழப்புகளை மறைப்பது வாடிக்கைதான். 1962ஆம் ஆண்டு நடந்த போரில் கூட சீனா தங்கள் தரப்பு உயிரிழப்புகளை ஒப்புக் கொள்ளவில்லை. சீனாவிற்கு பதிலடிக் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு பல வழிகள் உள்ளன. சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும். சீனாவை பொருளாதார ரீதியில் தோற்கடிக்க வேண்டும் என்றார் விகே சிங்.
-
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications