லடாக் எல்லையில் 40 சீன வீரர்களை கொன்றது இந்தியா.. மறைக்கிறது சீனா.. மத்திய அமைச்சர்
டெல்லி: லடாக் எல்லையில் நடந்த மோதலில் சீன ராணுவத்தினர் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பர் என்றும் அவர்கள் எப்போதுமே உயிரிழப்புகளை மறைத்து வருகிறார்கள் என்றும் மத்திய அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.
Recommended Video
லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் சீனா கடந்த 17-ஆம் தேதி நடத்திய திடீர் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். 76 பேர் காயமடைந்தனர். பதிலடிக்கு இந்திய வீரர்களும் தாக்கினர். இதில் ஏராளமான சீன ராணுவத்தினர் உயிரிழந்திருக்கக் கூடும் என இந்தியா தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கு சீனாவின் அத்துமீறலே காரணம் என இந்தியா தெரிவித்து வரும் நிலையில் சீனாவோ இந்திய வீரர்கள்தான் அத்துமீறினர் என பொய்யான தகவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
இந்த நிலையில் லடாக் எல்லையில் நடந்த மோதல் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சரும் முன்னாள் ராணுவ தலைமை ஜெனரலுமான விகே சிங் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் லடாக் எல்லையில் நடந்த மோதலில் இந்தியா 20 வீரர்களை இழந்துள்ளது. ஆனால் சீனாவோ 40க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்தது. சீனா தங்கள் உயிரிழப்புகளை மறைக்கிறது.
நரேந்திர மோடி அல்ல சரண்டர் மோடி.. லடாக் கட்டுரையை ஷேர் செய்து ராகுல் காந்தி பகீர் டிவிட்.. பின்னணி
இப்போது என்றில்லை, அவர்கள் எப்போதுமே அவர்கள் தரப்பு உயிரிழப்புகளை மறைப்பது வாடிக்கைதான். 1962ஆம் ஆண்டு நடந்த போரில் கூட சீனா தங்கள் தரப்பு உயிரிழப்புகளை ஒப்புக் கொள்ளவில்லை. சீனாவிற்கு பதிலடிக் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு பல வழிகள் உள்ளன. சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும். சீனாவை பொருளாதார ரீதியில் தோற்கடிக்க வேண்டும் என்றார் விகே சிங்.