இந்தியாவை சீண்டினால் தக்க பதிலடி தரப்படும்.. வீரர்களின் தியாகம் வீணாகாது..பிரதமர் மோடி எச்சரிக்கை!
இந்தியாவை சீண்டினால் தக்க பதிலடி கொடுக்கப்படும், இந்திய ராணுவ வீரர்களின் உயிர் தியாகம் வீணாகாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவை சீண்டினால் தக்க பதிலடி கொடுக்கப்படும், இந்திய ராணுவ வீரர்களின் உயிர் தியாகம் வீணாகாது என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
நேற்று முதல் நாள் இரவு லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வருகிறது. இந்த சண்டை காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அடுத்து எல்லையில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.

நேற்று மீட்டிங்
நேற்று நடந்த கொரோனா தொடர்பாக முதல்வர்கள் ஆலோசனையின் தொடர்ச்சியாக இன்றும் ஆலோசனை நடத்தினார். 15 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இன்று நடக்கும் மீட்டிங்கில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை தொடங்கும் முன் பிரதமர் மோடி லடாக் சண்டை குறித்து பேசினார்.

லடாக் எப்படி
லடாக்கில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறித்து மோடி பேசினார். பிரதமர் மோடி தனது பேச்சில், இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் சக்தி கொண்ட நாடு.இந்தியாவிற்கு அமைதி முக்கியம், ஆனால் நாங்கள் தாக்கப்பட்டால் பதிலடி கொடுப்போம். இந்தியா தனது உரிமைகளை என்றும் விட்டுக்கொடுக்காது. நம் உரிமையில் எந்தவித சமரசமும் கிடையாது.

பலம் சக்தி
நமது பலத்தையும், சக்தியையும் நாம் ஏற்கனவே வெளிப்படுத்தி இருக்கிறோம்.பலசாலியான இந்தியா மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம்.இந்தியர்களின் வீரத்தின் மீது நம்பிக்கை உள்ளது சரித்திரத்திலும் நமது வீரத்தை தெரிந்து கொள்ளலாம். எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் சரி தக்க பதிலடி கொடுக்கப்டும். இந்திய ராணுவ வீரர்களின் மரணம் வீணாக போகாது.

தக்க பதிலடி
அவர்களின் உயிர் தியாகம் வீணாகாது என்று கூறி சீனாவிற்கு பிரதமர் மோடி வலுவான எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக மாநில முதல்வர்கள் ஆலோசனையில் பிரதமர் மோடி இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினார். எழுந்து நின்று பிரதமர் மோடி இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினார். லடாக்கில் உயிர் நீத்த 20 ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications