"ஆபத்து".. அடம் பிடிக்கும் சீனா.. இந்தியாவின் பேச்சுவார்த்தை.. ஏன் பலனளிக்கவில்லை.. ராகுல் கேள்வி

சீனாவுடனான பேச்சுவார்த்தை தோல்வி ஏன் என்று ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "சீனாவுடன் தற்போது இந்தியா நடத்தி கொண்டிருக்கும் வீண் பேச்சுவார்த்தைகளால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டு கொண்டிருக்கிறது" என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எச்சரித்துள்ளார்.

கடந்த வருடம் ஏப்­ரல் மாதம் முதல் சீன ராணு­வம் எல்­லைபகு­தி­யில் அத்­து­மீற முயன்­ற­தா­க­வும் படை­களைக் குவிப்­ப­தா­க­வும் இந்­தியா பகிரங்கமாக குற்றம் சாட்டியது.. ஆனால், இதை சீனா திட்­ட­வட்­ட­மாக மறுத்தது.

இதையடுத்து, கடந்த மே மாதம் இரு­த­ரப்­புக்­கும் இடையே மோதல் மூண்டது.. எல்­லை­யில் கடுமையான பதற்றம் நில­வி­யது... இதை­ய­டுத்து இரு நாடு­களும் அமைதி ஏற்­ப­டுத்து­வதற்­கான வழி­வ­கை­கள் குறித்து ஆலோசிக்க முன்­வந்­தன.

 துருப்பு

துருப்பு

இதுவரை 2 நாட்டு ராணுவ அதிகாரிகளும் ஏற்கனவே 10முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியாகிவிட்டது.. சீனாவும் தங்களது துருப்புகளை படிப்படியாக வாபஸ் பெற்று வந்தன. ஆனால், அவைகளில் ஒரு முன்னேற்றமும் இல்லை.. காரணம், பங்கோங்சோ ஏரிப் பகுதியில் இருந்து சீனா படைகளை விலக்கிக்கொண்டதை வரவேற்ற இந்தியா, அதேபோல் பிற பகுதிகளில் இருந்தும் படைகளை திரும்பப்பெற வலியுறுத்தியது.

 பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

குறிப்பாக ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தேஸ்பங்க் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து சீனா தனது படைகளை முற்றிலுமாக திரும்பப்பெற வேண்­டும் என்று கூறப்பட்டது.. இதற்குதான் கடந்த ஏப்ரல் 9ம் தேதியன்று 11வது கட்ட பேச்சுவார்த்தையில் இந்தியாவும் சீனாவும் பங்கேற்றன. அப்போதும் எந்த சுமூக முடிவும் எட்டப்படவில்லை. இப்படியாக பேச்சுவார்த்தைகள் ஒரு வருடத்துக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கின்றன..

 ட்வீட்

ட்வீட்

இதைதான் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.. ஆக்கிரமிப்புகள் வாபஸ் பெறப்படாததாலும், இதுவரை நடத்திய பேச்சுவார்த்தை பலன் தராதது குறித்தும் மத்திய அரசை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்... இது குறித்து ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.

 வார்னிங்

வார்னிங்

அதில், "சீனாவுடன் நடத்தி வரும் தேவையற்ற பேச்சுக்களால் இந்த நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்துதான் ஏற்பட்டுள்ளது... எனவே இதைவிட தகுதியான, சிறந்த முடிவுகள் இந்தியாவுக்கு தேவை. கிழக்கு லடாக்கிலுள்ள ஹாட் ஸ்பிரிங், கோக்ரா மற்றும் தேஸ்பங்க் போன்ற பகுதிகளிலிருந்து தங்களது துருப்புகளை சீனா திரும்பப்பெற்றுக் கொள்ள மறுத்துள்ளது. படைகளைத் திரும்பப் பெறுவது பற்றிய சீனாவுடனான பேச்சுவார்த்தை ஏன் பலன் தரவில்லை என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்" என்று மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+