விவிஐபி ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா காந்திக்கு தொடர்பு இல்லை- அமலாக்கப் பிரிவு விளக்கம்
டெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழலில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு தொடர்பு இல்லை என அமலாக்கப் பிரிவு விளக்கம் அளித்திருக்கிறது.
2010-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிகளுக்காக 12 அதிநவீன சொகுசு ஹெலிகாப்டர்களை இத்தாலியின் அகஸ்டா வெஸ்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.
ரூ3,600 கோடி மதிப்பிலானது இந்த ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்துக்காக அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு ரூ400 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை வெடித்தது. நாட்டின் விமானப் படை தளபதியாக இருந்த தியாகி உள்ளிட்ட பலரது தலைகள் இந்த விவகாரத்தில் உருண்டன. பின்னர் 2014-ல் மத்திய அரசு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்திருந்தது.

சோனியா மறுப்பு
2016-ம் ஆண்டில் விவிஐபி ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா காந்திக்கு தொடர்பிருப்பதாகவும் சர்ச்சை வெடித்தது. ஆனால் சோனியா காந்தி இதனை திட்டவட்டமாக மறுத்திருந்தார். மேலும் இது தொடர்பான விசாரணைகளை எதிர்கொள்ளவும் தாம் தயார் எனவும் சோனியா கூறியிருந்தார்.

சுஷேன் மோகன் குப்தா கைது
இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டதாக சுஷேன் மோகன் குப்தா என்பவர் 2019-ம் ஆண்டு அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஆவணங்களில் பல இடங்களில் SG என குறிக்கப்பட்டிருந்தது. இந்த SG குறித்தும் பூதாகரமான சர்ச்சைகள் வெடித்தது.

SG யார்?
அதாவது SG என்பது காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியைத்தான் குறிக்கிறது என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை மேற்கோள்காட்டி காங்கிரஸ் கட்சியின் பி.வி.சீனிவாஸ் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ராஜீவ் சக்சேனா கொடுத்த பென் டிரைவில் இருந்த ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன. மின்னஞ்சல்கள் உள்ளிட்ட ஆவணங்களில் SG என குறிப்பிடப்பட்டிருந்தது.

SG - சோனியா அல்ல
இந்த SG என்பது சுஷேன் மோகன் குப்தாவையே குறிக்கிறது. காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை குறிக்கவில்லை என அமலாக்கப் பிரிவு கூறியிருக்கிறது என்றார். இதன் மூலம் ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா காந்திக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்ட சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications