குடியுரிமை சட்டத் திருத்தம்.. வட கிழக்கு மாநிலங்கள் எதிர்ப்பால் இறங்கி வரும் மத்திய அரசு
டெல்லி: குடியுரிமை (திருத்தம்) 2016 சட்டம் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்து வரும் நிலையில், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை சற்று தளர்த்தியுள்ளது.
ராஜ்யசபாவில் அறிமுகம் செய்யப்பட்டு, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்திருத்த த்தில், வெளிநாடுகளில் இருந்து 2014, மார்ச் 31ம் தேதி வரை குடியேறியுள்ள இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாம் உட்பட வட கிழக்கு மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் தனது நிலைப்பாட்டில் இருந்து சற்று இறங்கி வந்துள்ளது.

மாநில அரசின் சம்மதம்
மாநில அரசின் சம்மதம் இன்றி, வெளிநாட்டினருக்கு நேரடியாக இந்திய குடியுரிமை வழங்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அசோக் பிரசாத் கூறியதாவது: வட கிழக்கு மாநிலங்களில், இந்த சட்டத் திருத்தம் தொடர்பாக தவறான கருத்துக்கள் பரவியுள்ளன. யாாருக்கும் உடனடியாக குடியுரிமை வழங்குவது இந்த சட்டத்தின் நோக்கம் இல்லை.

ஒரே இரவில் இல்லை
சில குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும், மக்களை தேசிய நீரோட்டத்தில் கொண்டுவருவதே நோக்கம். அதுவும் கூட சில நிபந்தனைகள் அடிப்படையில்தான். யாருமே ஒரே நாள் இரவில் இந்திய குடிமகனாக மாற்றப்பட மாட்டார்கள்.

பின்னணி
மாநில அரசு, குறிப்பிட்ட குடிமகனின் பின்னணி குறித்து விசாரித்து, சிபாரிசு செய்தால்தான், அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த ஜனவரி 8ம் தேதி லோக்சபாவில் இந்த சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு வட கிழக்கு மாநில கட்சிகள் மட்டுமின்றி, பீகாரில், பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதள கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

7 வருடங்கள் போதும்
வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்தவர்கள் 12 வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்தால் இந்திய குடிமகன்களாக்கப்படுவார்கள். ஆனால் புதிய சட்டத் திருத்தத்தின்படி, இந்த கால வரம்பு 7 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. 2014, டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பாக இந்தியாவிற்கு வந்தவர்களுக்கு இந்த சட்டத் திருத்த அம்சங்கள் பொருந்தும்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications