உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வு- வழக்கு விசாரணைகள் நேரலையாக ஒளிபரப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் பணி ஓய்வு பெறும் நிலையில் அவரது தலைமையிலான பெஞ்ச் விசாரிக்கும் வழக்குகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியான என்.வி.ரமணா இன்று பணி ஓய்வு பெறுகிறார். நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக யுயு லலித் நாளை பொறுப்பேற்க உள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் இதுவரை இல்லாத வகையில் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவை சிறப்பிக்கும் வகையில் முதல் முறையாக அவரது தலைமையிலான பெஞ்ச் விசாரிக்கும் வழக்குகள் இன்று நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறதிஉ.

உச்சநீதிமன்றத்தின் 71 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக வழக்கு விசாரணைகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பெஞ்ச் விசாரணை நேரலை:
https://webcast.gov.in/events/MTc5Mg--












Click it and Unblock the Notifications