புது நாடாளுமன்றத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிடுவதா? டென்ஷன் ஆன ஒவைசி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க
டெல்லி: புதிய நாடாளுமன்றம் சவப்பெட்டி போல இருப்பதாக ஆர்.ஜே.டி விமர்சித்தது ஏன்? என்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி இந்த கோணத்தில் விமர்சித்து இருக்கக் கூடாது என்றும் வேறு எதையாவது சொல்லியிருக்கலாம் என்றும் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறக்க எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குடியரசுத்தலைவர்தான் புதிய நாடாளுமன்றத்தை திறக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கைக்கு செவி மடுக்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

குடியரசுத்தலைவர் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தடைகளை கடந்து திட்டமிட்டமிட்டபடி பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை இன்று திறந்து வைத்தார். இதனிடையே, பிரதமர் மோடி தன்னை முன்னிறுத்தும் நோக்கில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வைப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை 20 எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. இதனிடையே, புதிய நாடாளுமன்றம் சவப்பெட்டி போல இருப்பதாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ஷக்தி சிங் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இதற்கு ஒவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து ஒவைசி கூறுகையில், மக்களவை சபாநாயகர்தான் நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்திருக்க வேண்டும்.
பிரதமர் மோடி திறந்து வைத்திருக்கக் கூடாது. தானே அனைத்து செய்வதாகவும் பிற யாரும் எதையும் செய்யவில்லை என்பது போல பிரதமர் மோடி காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார். தன்னை முன்னிலைப்படுத்த்திக்கொள்ளும் பிரதமரின் வழி இது. அதேவேளையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி இந்த கோணத்தில் விமர்சித்து இருக்கக் கூடாது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு டெல்லி தீ அணைப்பு சேவையிடம் இருந்து கூட பாதுகாப்பு சான்றிதழ் கூட கிடைக்கவில்லை. சவப்பெட்டி போல இருப்பதாக ஆர்.ஜே.டி விமர்சித்தது ஏன்? வேறு எதையாவது சொல்லியிருக்கலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications