காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் கை கலப்பு! அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு!
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் உத்தரப்பிரதேச நிர்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. 18க்கும் மேற்பட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தை கூட வெல்ல முடியாமல் பூஜ்யம் பெற்றுள்ளது.
காங்கிரஸின் கோட்டை என கூறப்படும் பல இடங்களில் அக்கட்சி மண்ணை கவ்வியது. காலங்காலமாக காங்கிரஸின் கையில் இருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல தொகுதிகள் இம்முறை கை நழுவி போனது.

கை நழுவிய கோட்டை
அமேதி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியிடம் படுதோல்வி அடைந்தார். இந்த படுதோல்வியை காங்கிரஸ் கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை. தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியில் இருந்து விலக முடிவு செய்து பிடிவாதமாக உள்ளார் ராகுல்காந்தி.

உ.பி நிர்வாகிகள்
இந்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து மாநில வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் விவாதித்து கருத்துக்கேட்டு வருகிறது காங்கிரஸ் தலைமை. இன்று உத்தரப்பிரதேச மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு
இதில் கலந்து கொண்ட மேற்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. கட்சியின் தலைமை அலுவலக வளாகத்தில் நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
|
உட்கட்சி விவகாரம்
நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட இந்த தகராறை மூத்த நிர்வாகிகள் தடுத்து சமாதானம் செய்தனர். தகராறு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு இது உட்கட்சி விவகாரம் என்றனர். கட்சி அலுவலகத்திற்குள்ளேயே நிர்வாகிகள் தாக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
|
குலாம் நபி ஆசாத் சரியில்லை
காங்கிரஸ் நிர்வாகியான கேகே ஷர்மா தெரிவிக்கையில் காலை 10 மணிக்கு கூட்டம் என கூறினார்கள். அப்போதிலிருந்து காத்திருக்கிறோம் ஆனால் மாலை 3 மணிக்கு தான் கூட்டம் நடத்தப்பட்டது. அதுவும் சரியான நபர்களை சந்திக்காமல் தலைவர்கள் முடிவு எடுக்கின்றனர். ஜோதிராதித்யா சிந்தியாவிடம் குலாம் நபி ஆசாத் குறித்து நிறைய பேச வேண்டும் என கூட்டத்தில் கூறியுள்ளேன் என்றார்.
-
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications