கோட்சே விவகாரம்.. தர்ம சங்கடத்தில் காங்கிரஸ்...சிவசேனாவை வைத்து பாயும் அம்புகள்
டெல்லி: சிவசேனா கூடதான் 2010ல் கோட்சேவை தேசபக்தர் என்று சொன்னது.. இப்ப அந்த கட்சி கூடவே மகாராஷ்டிராவில் நீங்க கூட்டணி வைச்சிருக்கீங்க இது மட்டும் சரியா என்று காங்கிரஸ் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர், தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை தேச பக்தர் என்று புகழ்ந்து பேசினார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அவை நடவடிக்கைகளை முடக்கி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரக்யாவுக்கு தடை
மேலும் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் உள்பட 50 பேர் பிரக்யா சிங்கை நாடாளுமன்றத்தின் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கவேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

பிரக்யா பயங்கரவாதி
இதனிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரக்யா சிங் தாகூரை, பயங்கரவாதி என்றும் அதனால் தான் பயங்கரவாதியான கேட்சேவை தேசபக்தர் என்கிறார் என்றும், இந்திய நாடாளுமன்றத்தின் கருப்பு தினம் என்றும் விமர்சித்தார்.

கோட்சே தேச பக்தர்
பயங்கரவாதி பிரக்யாசிங் தாகூர் என்று டுவிட்டரில் ஹேஷ்டேக்குகள் வைரலாகி வரும் நிலையில் அதில் சிலர் தங்கள் டுவிட் பக்கத்தில், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னா கடந்த 2010ம் ஆண்டு கோட்சேவை தேசபக்தர் என்று விமர்சித்து இருந்தது. அந்த கட்சியுடன் தான் நீங்கள் இப்போது கூட்டணி வைத்துள்ளீர்கள் என விமர்சித்துளளனர்.

சிவசேனா குறித்து
கோட்சேவை தேசபக்தர் என்ற சொன்ன பிரக்யாவுக்கு பயங்கரவாதி பட்டம் கொடுக்கும் காங்கிரஸ், சிவனோவுக்கு மட்டும் முதல்வர் பதவி அளிக்கிறேதே என்று விமர்சித்து வருகிறார்கள். இதனால் தர்மசங்கடமான நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. சிவசேனா குறித்த விமர்சனங்களை தவிர்த்து வருகிறது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications