‛‛எக்சிட் போல்’’ விவாதத்தை புறக்கணித்த காங்கிரஸ்.. காரணம் என்ன தெரியுமா? கிண்டல் செய்த அமித்ஷா
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தொடர்பான இன்றைய ஊடக விவாதங்களில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என அறிவித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கிண்டல் செய்துள்ளார்.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய லோக்சபா தேர்தல் கடந்த
இன்றுடன் முடிவுக்கு வர உள்ளது. இன்று கடைசி கட்ட லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவுக்கு வர உள்ளது. வரும் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் தான் இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் முடிவடைந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய லோக்சபா தேர்தல் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நிலையில் தான் காங்கிரஸ் கட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பான ஊடக விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்காது என்று தெரிவித்துள்ளது. ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு ஊடக விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்தார்.
இந்நிலையில் தான் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு தொடர்பான விவாதங்களில் பங்கேற்க மாட்டோம் எனக்கூறிய காங்கிரஸ் கட்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கும் போக்கில் உள்ளது.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் நாங்கள் பெரும்பான்மையை பெறப்போகிறோம் என பிரசாரம் செய்தார். ஆனால் உண்மையில் அவர்களுக்கு என்ன நிலை என்பது தெரியும். அவர்களால் மீடியாவை எதிர்கொள்ள முடியாது. இதனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவாதத்தை புறக்கணிக்கிறார்கள்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் என்பது நீண்டகாலமாக நடந்து வருகிறது. அதில் காங்கிரஸ் தோற்கிறது. இந்த முறையும் தோல்விக்கு விளக்கம் அளிக்க முடியாது என்பதால் காங்கிரஸ் கட்சி இந்த விவாதத்தில் பங்கேற்காமல் புறக்கணிக்கிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்ற காலம் முதல் இன்று வரை அவர்கள் இத்தகைய மறுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்'' என விமர்சனம் செய்தார்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்!












Click it and Unblock the Notifications