Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛எக்சிட் போல்’’ விவாதத்தை புறக்கணித்த காங்கிரஸ்.. காரணம் என்ன தெரியுமா? கிண்டல் செய்த அமித்ஷா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தொடர்பான இன்றைய ஊடக விவாதங்களில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என அறிவித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கிண்டல் செய்துள்ளார்.

நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய லோக்சபா தேர்தல் கடந்த
இன்றுடன் முடிவுக்கு வர உள்ளது. இன்று கடைசி கட்ட லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது.

lok sabha election 2024 bjp congress amit shah national 2024 politics

காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவுக்கு வர உள்ளது. வரும் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் தான் இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் முடிவடைந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய லோக்சபா தேர்தல் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நிலையில் தான் காங்கிரஸ் கட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பான ஊடக விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்காது என்று தெரிவித்துள்ளது. ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு ஊடக விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்தார்.

இந்நிலையில் தான் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு தொடர்பான விவாதங்களில் பங்கேற்க மாட்டோம் எனக்கூறிய காங்கிரஸ் கட்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கும் போக்கில் உள்ளது.

லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் நாங்கள் பெரும்பான்மையை பெறப்போகிறோம் என பிரசாரம் செய்தார். ஆனால் உண்மையில் அவர்களுக்கு என்ன நிலை என்பது தெரியும். அவர்களால் மீடியாவை எதிர்கொள்ள முடியாது. இதனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவாதத்தை புறக்கணிக்கிறார்கள்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் என்பது நீண்டகாலமாக நடந்து வருகிறது. அதில் காங்கிரஸ் தோற்கிறது. இந்த முறையும் தோல்விக்கு விளக்கம் அளிக்க முடியாது என்பதால் காங்கிரஸ் கட்சி இந்த விவாதத்தில் பங்கேற்காமல் புறக்கணிக்கிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்ற காலம் முதல் இன்று வரை அவர்கள் இத்தகைய மறுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்'' என விமர்சனம் செய்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+