ராகுலுக்காக களமிறங்கும் காங்கிரஸ்.. தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் மெகா திட்டம்
டெல்லி: அம்பேத்கர் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படும் விவகாரத்தில் அமித்ஷாவிடம் இருந்து மத்திய அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும். 2 எம்பிக்களின் மண்டை உடைந்தது தொடர்பாக ராகுல் காந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் இன்று கடைசி நாளாகும். இதற்கிடையே தான் தற்போது ஆளும் பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் காரணம். அதாவது சமீபத்தில் அமித்ஷா, ராஜ்யசபாவில் அம்பேத்கர் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் அமித்ஷா மன்னிப்பு கோரி தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தையும் எதிர்க்கட்சியினர் முடக்கி வருகின்றனர். நேற்றைய தினம் நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக வந்தபோது அவர்களுக்கும் பாஜக எம்பிக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜக எம்பிக்கள் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோரின் மண்டை உடைந்தது. ராகுல் காந்தியால் தான் அவர்களின் மண்டை உடைந்ததாக புகாரளிக்கப்பட்டது. அந்த புகாரில் ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் நாடு முழுவதும் இன்று 2வது நாளாக காங்கிரஸ் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களின் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சியின் இன்று போராட்டம் நடத்த உள்ளனர். அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய அமித்ஷாவிடம் மத்திய அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்றும், பாஜக எம்பிக்களை தாக்கியதாக ராகுல் காந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்தப்பட உள்ளது.
அதோடு காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல், சாலை மறியலில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் சில இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட பிரச்சனையால் இன்று எந்த கட்சியினரும் நாடாளுமன்ற நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தக்கூடாது என்று லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார். ஆனால் இன்று குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாள் என்பதால் எதிர்க்கட்சியினர் தடையை மீறி போராட்டம் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இதனால் காலையிலேயே நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
-
காங்கிரஸ்-க்கு குட்பை.. விலகுவதாக அறிவித்தார் அமெரிக்கை நாராயணன்.. கட்சி மீது கடும் அதிருப்தி -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
செல்வப்பெருந்தகை தூக்கப்படுகிறாரா? ராகுலுக்கு போன "ரகசிய ஆதாரம்" அடுத்ததாக அந்த கட்சியில் இணைகிறாரா? -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை!












Click it and Unblock the Notifications