பிரதமர் மோடி அறிமுகம் செய்த புதிய இரண்டு வார்த்தை... ப.சிதம்பரம் பதிலடி ட்வீட்
டெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பயன்படுத்திய 'andolan jeevi' எனும் வார்த்தைக்கு பதில் கொடுக்கும் விதமாக, காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் 4 லட்சம் அல்ல 40 லட்சம் டிராக்டர்கள் அணிவகுக்கும் என்றும் டெல்லியில் போராடும் விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சூழலில், சமீபத்தில் மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, "சில புதிய வகை நபர்கள் உருவாகியுள்ளனர். ஒரு புதிய கூட்டம் உருவாகியிருக்கிறது. அவர்கள் வக்கீல்கள் போராட்டம், மாணவர்கள் போராட்டம், தொழிலாளர்கள் போராட்டம் என்று எந்த போராட்டம் நடந்தாலும், அங்கே இருப்பார்கள். இவர்களிடம் நாடு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அவர்களால் போராட்டமின்றி வாழ முடியாது... நாம் அவர்களை அடையாளம் காண வேண்டும், தவறான கருத்தியலை போதித்து தவறாக வழிநடத்துகிறார்கள். இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தன. போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அவமதிக்கும் விதமாக பிரதமரின் பேச்சு உள்ளதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டரில், "நான் ஒரு பெருமைமிகு andolan jeevi. அதில், மகாத்மா காந்தி ஆகச்சிறந்தவர்" என்று பதிலளித்துள்ளார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications