Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மே 28, 2023 ஞாபகம் இருக்கா? மோடி நாடகம் ஓவர்.. ஜெய்ராம் ரமேஷ் தமிழில் வெளியிட்ட பதிவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மோடியின் செங்கோல் நாடகம் முடிவுக்கு வந்திருக்கிறது, தமிழ்நாட்டு வாக்காளர்கள் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவி ஏற்கிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்து, நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இன்று மாலை 7.15 மணிக்கு டெல்லியில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

Narendra Modi BJP NDA Jairam ramesh Congress


இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “மே 28, 2023 நினைவிருக்கிறதா? செங்கோலுடன் மோடி புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைந்த நாள். மோடி ஒரு பேரரசர் என்று நியாயப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், தமிழ் வாக்காளர்களை ஈர்க்கவும், 15 ஆகஸ்ட் 1947-ம் ஆண்டு வரலாறு திரிக்கப்பட்டது.

அந்த நாடகத்தின் முடிவு இப்போது எல்லோருக்கும் தெரியும். செங்கோல் என்பது தமிழர் வரலாற்றின் மதிப்பிற்குரிய அடையாளமாக உள்ளது. ஆனால் தமிழ் வாக்காளர்களும் உண்மையில் இந்தியாவின் வாக்காளர்களும் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் அவர் அத்துமீறிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு அடிபணிய வேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளார்." என விமர்சித்துள்ளார்.

முன்னதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த ஜெய்ராம் ரமேஷ், “இந்தியாவில் உள்ள பிரதமர்களில் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, தொடர்ந்து 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கப் போவதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஒரு கட்சியை வழிநடத்தி 240 இடங்களில் வெற்றி பெறச் செய்வது மட்டும், ஒரு பிரதமரின் வேலையல்ல.

அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடர்ச்சியாக 1952 ஆம் ஆண்டில் 364 இடங்களிலும், 1957 ஆம் ஆண்டு 371 இடங்களிலும், 1962 ஆம் ஆண்டில் 361 இடங்களிலும் வெற்றிபெற்றார். போட்டியிட்ட அனைத்து முறையும் மூன்றில் இரண்டு பங்கு தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தார். ஆயினும் அவர் தன்னை ஒரு ஜனநாயகவாதியாகவும், நாடாளுமன்றத்தை மிகவும் கவனமாக, நிலையான இருப்பில் வைத்திருப்பவராகவும் இருந்தார்.

நேருவுக்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமாக பதவியேற்கப் போகும் ஒரே மனிதர் மோடி மட்டுமல்ல. நேருவைத் தொடந்து இந்திரா காந்தி, 1966, 1967, 1971 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் 4 முறை பிரதமராகவும், அடல் பிஹாரி வாஜ்பாய், 1996, 1998 , 1999 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை பிரதமராகவும் பதவியேற்றனர். பிரதமர் மோடியின் இந்த பரிதாபகரமான தேர்தல் நிலையை நியாயப்படுத்த என்ன வேண்டுமானலும் சொல்லி அவர்கள் தம்பட்டம் அடித்துக்கொள்ளவார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தால் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோல் இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு மே மாதம் புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டபோது செங்கோல் வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அங்கே அழைத்துச் செல்லப்பட்டனர். நாட்டின் முதல் பிரதமர் நேருவிடம் அளிக்கப்பட்ட செங்கோல், புதிய நாடாளுமன்றத்திலும் நிறுவப்பட்டது. இதன் மூலம், தமிழ் அடையாளத்திற்கு இந்திய நாடாளுமன்றத்தில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டதாக பாஜகவினர் கூறினர். எனினும், லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+