"பொய்யர்களின் தலைவர் மோடி!" ... காங்கிரஸ் தலைவர் சித்து கடும் விமர்சனம்!
மத்திய பிரதேச தலைநகர் இந்தூரில் காங்கிரஸ் தலைவரான சித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,"குறைந்த சப்பாத்திகளை சுட்டாலும், அண்டை வீட்டார் மத்தியில் அதிக வேலை செய்வது போல மணமான புதுப்பெண்கள் வளையல் சத்தத்தை ஏற்படுத்தி காட்டுவர். அதேபோலவே மோடியும் காட்டிக் கொள்கிறார். இதுதான் மோடி அரசாங்கத்தில் நடந்துள்ளது.
மக்களுக்கான நலனுக்காகத்தான் தேர்தலில் போராடுகிறோம். நாாட்டையே கொள்ளையடித்த பாஜகவுக்கு எதிராக அல்ல. நாட்டை பாஜக கொள்ளையடிப்பது குறித்து, எதிர்கால சந்ததியினர் எங்கள் மீது விரல் நீட்டிவிடக்கூடாது என்பதற்காக, பிரதமர் மீது ஏராளமான புகார்களை நான் எழுப்பி இருக்கிறேன்.

இதுவரை 6 செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடிக்கு எதிராக புகார்களை தெரிவித்துள்ளேன். ஆனால், அவர் ஒரு பிரச்னைக்கு கூட தீர்வு காணவில்லை. மேலும், கூர்ந்து பார்த்தால், பெண்கள் பாதுகாப்பு, கல்வி, பசிக் கொடுமை, விவசாயிகள் பற்றி அவர் பிரச்சாரத்தில் ஒரு வார்த்தை பேசுவதில்லை," என்று கூறினார்.
டைம்ஸ் இதழ் அட்டைப்படத்தில் மோடியை பிரிவினைவாதிகளின் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளது பற்றி சித்துவிடம் செய்தியாளர்கள் வினவினர். அப்போது," பிரதமர் மோடி, பொய்யர்களின் தலைவர், பிரிவினைவாதிகளின் தலைவர், அம்பானி மற்றும் அதானிகளின் மேனேஜர் என்று நான் அழைப்பேன்," என்று காட்டமாக கூறினார்.
"பாஜக தலைமை கருப்பு தோல் கொண்ட ஆங்கிலேயர் போன்று உருவகப்படுத்தி சர்ச்சைக்குரிய கருத்தையும் சித்து கூறி இருக்கிறார். நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி காங்கிரஸ். ஆங்கிலேயரிடம் இருந்து காங்கிரஸ் கட்சியின் மவுலானா ஆஸாத் மற்றும் மஹாத்மா காந்தி சுதந்திரம் பெற்று தந்தனர்.
ஆனால், தற்போது கருப்பு ஆங்கிலேயரிடமிருந்து இந்தூர் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும். பொய்யர்கள் மற்றும் காவலாளிகளிடம் இருந்து நாட்டுக்கு நாங்கள் சுதந்திரம் பெற்றுத் தருவோம்," என்று இந்தூரில் சித்து சூளுரைத்தார்.
காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கியாக மாறி இருக்கும் சித்து தேர்தல் பிரச்சாரத்தின்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து சிக்கலில் மாட்டி வருகிறார். கடந்த மாதம் பீகார் முஸ்லீம்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், 72 மணிநேரம் பிரச்சாரம் செய்ய சித்துவுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது பிரதமர் மோடி மீதான சர்ச்சைக்குரிய கருத்துக்காக விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications